Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அமெரிக்காவில் குரு சச்சிதானந்தா ஆசிரமத்தில் ரஜினிகாந்த்!
யோகாவில்லே(வர்ஜீனியா): ஓய்வுக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள தனது குரு சச்சிதானந்தாவின் ஆசிரமத்துக்குப் போய் வழிபட்டார்.
கடந்த மே மாதம் 2.ஓ படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த். ஓய்வுக்காகவும், 2.ஓ படத்தின் சில சோதனைகளுக்காகவும் அவர் அமெரிக்கா சென்றதாக கூறப்பட்டது.
ஆனால் ஊடகங்களில் கடந்த இரு மாதங்களாக பல்வேறு விதமான யூகங்களை செய்திகளாக வெளியிட்டு வந்தனர். அவருக்கு உடல் நிலை சரியில்லை, சிறுநீரகக் கோளாறு, மருத்துவமனையில் சிகிச்சை என்றெல்லாம் எழுதி வந்தனர்.
ஆனால் இதுகுறித்து ரஜினி குடும்பத்தினர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ரஜினி நலமுடன் ஓய்வெடுத்து வருகிறார் என்று மட்டும் கூறினர்.
இந்த நிலையில் கடந்த வாரம் ரஜினி சென்னை திரும்புவதாகக் கூறினர். ஆனால் அவர் இந்த வாரம்தான் சென்னை திரும்புகிறார்.
அவர் கடந்த சில தினங்களாக தனக்குப் பிடித்தமான, வர்ஜீனியாவின் யோகாவில்லே நகரில் உள்ள பரந்து விரிந்த லோடஸ் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். இந்த ஆசிரமத்தை உருவாக்கியவர் ரஜினியின் குரு சச்சிதானந்த சுவாமிகள். இந்த ஆசிரமத்தில் 30வது ஆண்டு விழாவிலும் ரஜினி பங்கேற்றார்.
ரஜினியுடன் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவும் சென்றுள்ளார்.