Don't Miss!
- News சிக்கலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
அமெரிக்காவில் குரு சச்சிதானந்தா ஆசிரமத்தில் ரஜினிகாந்த்!
யோகாவில்லே(வர்ஜீனியா): ஓய்வுக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள தனது குரு சச்சிதானந்தாவின் ஆசிரமத்துக்குப் போய் வழிபட்டார்.
கடந்த மே மாதம் 2.ஓ படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த். ஓய்வுக்காகவும், 2.ஓ படத்தின் சில சோதனைகளுக்காகவும் அவர் அமெரிக்கா சென்றதாக கூறப்பட்டது.
ஆனால் ஊடகங்களில் கடந்த இரு மாதங்களாக பல்வேறு விதமான யூகங்களை செய்திகளாக வெளியிட்டு வந்தனர். அவருக்கு உடல் நிலை சரியில்லை, சிறுநீரகக் கோளாறு, மருத்துவமனையில் சிகிச்சை என்றெல்லாம் எழுதி வந்தனர்.
ஆனால் இதுகுறித்து ரஜினி குடும்பத்தினர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ரஜினி நலமுடன் ஓய்வெடுத்து வருகிறார் என்று மட்டும் கூறினர்.
இந்த நிலையில் கடந்த வாரம் ரஜினி சென்னை திரும்புவதாகக் கூறினர். ஆனால் அவர் இந்த வாரம்தான் சென்னை திரும்புகிறார்.
அவர் கடந்த சில தினங்களாக தனக்குப் பிடித்தமான, வர்ஜீனியாவின் யோகாவில்லே நகரில் உள்ள பரந்து விரிந்த லோடஸ் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். இந்த ஆசிரமத்தை உருவாக்கியவர் ரஜினியின் குரு சச்சிதானந்த சுவாமிகள். இந்த ஆசிரமத்தில் 30வது ஆண்டு விழாவிலும் ரஜினி பங்கேற்றார்.
ரஜினியுடன் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவும் சென்றுள்ளார்.