பவர் பாண்டி ராஜ்கிரணை வாழ்த்திய ரஜினிகாந்த்!
பவர் பாண்டி படத்தில் தனுஷ் இயக்கத்தில் நடித்து வரும் ராஜ்கிரணை, படப்பிடிப்பின் முதல் நாளில் வாழ்த்தி இன்ப அதிர்ச்சி தந்துள்ளார் ரஜினிகாந்த்.
இந்தத் தகவலை ராஜ்கிரணே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் கூறியது:
முதல்நாள் பூஜையோடு ஷூட்டிங் ஆரம்பித்தது காலை 11 மணி இருக்கும். தனுஷூக்கு திடீரென ஒரு போன் வந்தது பரபரப்பாக பேசிக்கொண்டு இருந்தவர் படாரென செல்போனை என்னிடம் கொடுத்தார். நான் காதில் வைத்தேன்.
எதிர்முனையில் சூப்பர் ஸ்டார் ரஜியின் குரல்.
'என்ன ராஜ்கிரண் எப்படி இருக்கீங்க வாழ்த்துகள். நீங்க நடிக்கிற 'பவர் பாண்டி' படம் சூப்பர் டூப்பர் கதை. வெற்றிபெறப் போகிற கதையில் நடிக்கிறீங்க மறுபடியும் வாழ்த்துகள்' சொல்லி பாராட்டினார், ரஜினிசார். நான் மகிழ்ச்சியில் திகைத்துவிட்டேன்!"
Comments


Click it and Unblock the Notifications