Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
புதுக்கோட்டை தேர்தலில் போட்டியிடக் கூடாது... மன்றச் செயலாளருக்கு ரஜினி உத்தரவு?
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது, தேமுதிக போட்டியிடுகிறது, இந்திய ஜனநாயகக் கட்சியும் போட்டியிடுகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் ஸ்ரீதர் என்பவரும் போட்டியிட மனு செய்துள்ளார்.
இவர் ரஜினி மன்றம் சார்பில் போட்டியிடுகிறார். மேலும் மன்றக் கொடியையும் பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறார். வேட்பு மனு தாக்கலின்போது ரஜினி ரசிகர்கள் புடை சூழ, மன்றக் கொடி, பேனருடன் ஊர்வலமாக சென்று பரபரப்பையும் ஏற்படுத்தினார்.
இது ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மன்றத்தின் பெயரில் ஸ்ரீதர் போட்டியிடுவதை அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே போட்டியிலிருந்து வாபஸ் பெறுமாறு ஸ்ரீதருக்கு அறிவுரை போயிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ரஜினி அப்படி உத்தரவிட்டுள்ளாரா என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.
இந்த விவகாரம் குறித்து ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பாளரான சுதாகர் என்பவர் கூறுகையில், ரசிகர்கள் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம், எந்தக் கட்சிக்காகவும் தேர்தல் வேலை செய்யலாம். அதை ஒருபோதும் ரஜினிகாந்த் தடுத்ததில்லை.
ஆனால் தேர்தல் பணியில் ஈடுபடும் யாரும் ரஜினியின் பெயரையோ, மன்றக் கொடியையோ பயன்படுத்தக் கூடாது. முதலில் ரசிகர்கள் தங்களது குடும்பங்களைத்தான் கவனிக்க வேண்டும். இதைத்தான் எப்போதும் ரஜினி சொல்லி வருகிறார், ஆசைப்படுகிறார்.
ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஸ்ரீதர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தகவலை பத்திரிகை மூலம் அறிந்தோம். நான் அவரிடம் ரஜினி பெயரையோ ரசிகர் மன்றத்தின் பெயரையோ மன்ற கொடியையோ பயன்படுத்தி தேர்தலில் நிற்கக் கூடாது என்று கூறி இருக்கிறேன் என்றார்.
ஆனால் தான் ரஜினி மன்றம் சார்பில் போட்டியிடுவது என்று அனைத்து ரசிகர்களும் கூடி எடுத்த முடிவு என்று ஸ்ரீதர் கூறுகிறார். இதனால் இவர் வாபஸ் பெறுவாரா, மாட்டாரா என்பது குழப்பமாகியுள்ளது.