Don't Miss!
- News உன் பிரச்சினையே லாரில அள்ளிட்டு போற அளவு இருக்கு.. இதுல நீ அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ற!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஆனார் ராஜு மகாலிங்கம்!
Recommended Video
சென்னை: இதுவரை லைகா நிறுவன நிர்வாகியாக இருந்த ராஜூ மகாலிங்கம் இப்போது ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தவர் சுபாஷ்கரன்.
லைகாவின் சினிமா தயாரிப்புகளை முழுமையாகப் பார்த்துக் கொண்டவர் இவர்தான். ரஜினிகாந்த் நடிப்பில் 2.ஓ படம் உருவாகக் காரணமானவர்களுள் இவரும் ஒருவர். ஆரம்பத்திலிருந்தே ரஜினிக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்து படமெடுத்துக் கொண்ட நிகழ்வுகள் அனைத்திலும் தவறாமல் கலந்து கொண்டவர் ராஜு மகாலிங்கம்.
கடந்த டிசம்பர் மாதம் ரஜினி தனது தனிக் கட்சி முடிவை அறிவித்ததுமே, ராஜு மகாலிங்கம் லைகாவிலிருந்து வெளியேறினார். ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் கூட்டம், நிர்வாகிகள் தேர்வில் நிர்வாகி சுதாகருடன் இணைந்து செயல்பட்டார் ராஜு மகாலிங்கம்.
இப்போது அவரையே மக்கள் மன்றத்தின் செயலாளர் பொறுப்பில் நியமித்துள்ளார் ரஜினிகாந்த். விஎம் சுதாகர் மக்கள் மன்ற நிர்வாகியாகத் தொடர்கிறார்.