Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நீ சாதாரணமா பேசு.. ராஜு பாயே டென்ஷன் ஆகிட்டாரே.. தேவையில்லாமல் வாய் கொடுத்து புண்ணான அபிஷேக்!
சென்னை: உப்பு சப்பு இல்லாத விஷயத்தை கூட ஊதி பெரிதாக்கி அதில் கேமரா பார்வையை தேட நினைத்த அபிஷேக் ராஜாவை டென்ஷன் ஆகி திட்ட ஆரம்பித்து விட்டார் ராஜு ஜெயமோகன்.
இமான் அண்ணாச்சி சமையலில் சில குறைகளை தேவை இல்லாமல் சொல்கிறார் என பிரியங்கா கொளுத்திப் போட அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மூக்கை நுழைத்த அபிஷேக் ராஜாவை இடையே புகுந்து ராஜு பாய் வெளுத்து வாங்கி விட்டார்.
இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனையே இல்லை தேவையில்லாமல் குரலை உசத்த வேண்டாம் என பிரியங்காவுக்கு பஞ்ச் கொடுத்தார்.
சர்ச்சை கிளப்பிய உப்பு
சமையல் டீம் செய்யும் சமையலில் இருந்த சில குறைகளை இமான் அண்ணாச்சி தனிப்பட்ட முறையில் பேசியதை பொது வெளியில் அனைவரும் இருக்கும் போது கொளுத்திப் போட்டு கேம் ஆடினார் பிரியங்கா. அதை புரிந்து கொண்ட ராஜு பாய் இது தேவை இல்லாத விஷயம் யாரும் இதை பற்றி பேச வேண்டாம் என ஆஃப் செய்தார்.
மன்னிப்பு கேட்ட அண்ணாச்சி
விஷயம் பெரிதாக நான் யாரிடமும் சமையல் சரியாக இல்லை என்று கூறவில்லை. எனக்கு தெரிந்த சில ஐடியாவை தான் சொன்னேன். அது யார் மனதையாவது புண் படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்க என இமான் அண்ணாச்சி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு விட்டார்.
மூக்கை நுழைத்த அபிஷேக்
இமான் அண்ணாச்சியே அந்த விவகாரத்தை பேசி முடிக்கும் போது அங்கேயும் வெளிச்சத்தை தேட நினைத்து தேவையில்லாமல் மூக்கை நுழைத்த அபிஷேக் ராஜா உப்பு மேட்டரை கையில் எடுத்து பேச அங்கேயும் அண்ணாச்சி தெளிவாக நான் யாரிடமும் உப்பு கம்மியா இருக்குன்னு சொல்லல என ஆஃப் செய்தார்.
டென்ஷனான ராஜு
தொடர்ந்து அபிஷேக் ராஜா வரம்பு மீறி பேசுவது ஏன் என புரிந்து கொண்ட ராஜு அண்ணாச்சியை அமைதியாக்க நீ ஏன் அவரை பேச விட மாட்ற.. அவர் பேசட்டும் அது அவரோட உரிமை என அபிஷேக் பேச டென்ஷனான ராஜு அபிஷேக்கிடம் எகிற ஆரம்பித்து விட்டார்.
சாதாரணமா பேசு
நீ சாதாரணமா பேசு ஏன் இப்படி பேசுற என அபிஷேக்கை வச்சி விளாசி விட்டார் ராஜு ஜெயமோகன். மேலும், இது ஒரு பெரிய பிரச்சனையே இல்லை யாரும் பேச வேண்டாம் என தெளிவாக பேசி அந்த இடத்திலும் ஸ்கோர் செய்து விட்டார்.
ராஜு தான் வின்னரா
இப்போதைக்கு இருக்கும் சூழலை பார்த்தால் ராஜு ஜெயமோகன் தான் இந்த சீசன் 5ஐ வின் பண்ணுவார் என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், வைல்டு கார்டு என்ட்ரியாக வரப் போகும் நபர்கள் ஆட்டத்தை மாற்றுவார்களா? இல்லை உள்ளே இருக்கும் பெண் போட்டியாளர்கள் வரும் வாரங்களில் ஜொலிப்பார்களா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.