Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அவர் வயிற்றில் என் குழந்தை: தொழில் அதிபரை மணந்த நடிகை பற்றி தீபக் பரபரப்பு
மும்பை: நடிகை ராக்கி சாவந்த் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நான் தான் தந்தை என்று தீபக் கலால் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பிறந்த தீபக் கலால் யூடியூபில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமானார். பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தீபக் கலாலை திருமணம் செய்யப் போவதாக கடந்த 2018ம் ஆண்டு அறிவித்ததுடன் பத்திரிகையையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். ஆனால் அந்த திருமணம் நடக்கவில்லை.
இந்நிலையில் ராக்கி இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய தொழில் அதிபரான ரித்தேஷை திருமணம் செய்து கொண்டதாக கடந்த மாதம் அறிவித்தார்.
எதிர்பாராத டிவிஸ்ட்.. கெஸ்ட்டாக பிக் பாஸுக்கு வரும் சாக்ஷி.. பாவம் கவின் இனி தினம்தினம் தீபாவளிதான்
ராக்கி சாவந்த்
ராக்கி தான் மட்டும் இருக்கும் புகைப்படங்களை தான் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். கணவருக்கு பப்ளிசிட்டி பிடிக்காது என்பதால் அவரின் புகைப்படங்களை வெளியிடவில்லை என்றார். ஆனால் ராக்கிக்கு யாருடனும் திருமணம் நடக்கவில்லை என்றும், அவர் வழக்கம் போன்று விளம்பரம் தேட பொய் சொல்லியுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கர்ப்பம்
தீபக் கலால் வீடியோ ஒன்றை வெளியிட்டு ராக்கி சாவந்தை விளாசியுள்ளார். மேலும் ராக்கி தற்போது 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், அந்த குழந்தைக்கு நான் தான் தந்தை என்றும் தீபக் தெரிவித்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் ராக்கி இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது சரியில்லை என்று தீபக் விளாசியுள்ளார்.
கணவர்
தீபக் கலாலுடன் திருமணம் நிச்சயமாகி நின்றுவிட்டதே என்று ராக்கி சாவந்திடம் அண்மையில் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, தீபக் எனக்கு சகோதரர் போன்றவர் என்று கூறி அனைவரையும் வியக்க வைத்தார். ரித்தேஷுக்கும், தனக்கு ஜே.டபுள்.யூ. மாரியட் ஹோட்டலில் திருமணம் நடந்ததாக ராக்கி கூறினார். முதலில் இந்து முறைப்படியும், அடுத்தது கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
படங்கள்
திருமணம் முடிந்த பிறகு ரித்தேஷ் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார். விசா காரணமாக நான் மும்பையில் உள்ளேன். விசா கிடைத்தவுடன் நானும் இங்கிலாந்துக்கு சென்றுவிடுவேன். வெளிநாட்டிற்கு சென்றாலும் நான் தொடர்ந்து இந்திய படங்களில் நடிப்பேன் என்றார் ராக்கி. ஆனால் ரித்தேஷுடன் திருமணமே நடக்கவில்லை என்று தற்போது கூறப்படுகிறது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!