Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
எனக்கு பயந்து தான் ஆணுறை விளம்பரத்திற்கு அரசு தடை விதித்துள்ளது: நடிகை ஆவேசம்
Recommended Video
மும்பை: ஆணுறை விளம்பரங்களை பகலில் ஒளிபரப்ப அரசு தடை விதித்தது ஏன் என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவ்ந்த் விளக்கம் அளித்துள்ளார்.
ஆணுறை விளம்பரங்களை பகல் நேரத்தில் டிவியில் ஒளிபரப்ப அரசு தடை விதித்துள்ளது. ஆணுறை விளம்பரங்களில் நடிக்க பாலிவுட் பிரபலங்கள் ஆர்வம் காட்டும் நேரத்தில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கூறியிருப்பதாவது,
ராக்கி சாவந்த்
அதிக அளவில் ஆணுறை விளம்பரங்கள் எடுக்கப்பட வேண்டும். ஆணுறை பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்படுத்த வேண்டும். எதற்காக ஆணுறை பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு தெரிய வேண்டும். சமூக சேவையாக நினைத்தே நான் ஆணுறை விளம்பரத்தில் நடித்தேன்.
பிபாஷா பாசு
சன்னி லியோன், பிபாஷா பாசு ஆகியோர் ஆணுறை விளம்பரத்தில் நடித்தபோது அதை அரசு தடை செய்யவில்லை. நான் ஆணுறை விளம்பரத்தில் நடித்து அது பற்றி அனைவரும் பேசியவுடன் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை ஆணுறை விளம்பரத்தை ஒளிபரப்பக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
என்ன பிரச்சனை?
என் விளம்பரத்தை பார்க்கும் முன்பே அரசு தடை விதித்ததுள்ளது. அரசுக்கு அவ்வளவு பயமா? அரசுக்கு அப்படி என்ன தான் பிரச்சனை. ஆணுறை விளம்பரத்தை நிறுத்தினால் இந்தியாவில் அனைவருக்கும் எய்ட்ஸ் வரும்.
எய்ட்ஸ்
இந்தியர்களுக்கு எய்ட்ஸ் வர வேம்டும் என்று அரசு விரும்புகிறது போன்று. அரசு என்னை குறி வைத்தே விளம்பரத்திற்கு தடை விதித்துள்ளது. நான் படத்தில் நடித்தால் அது அரசுக்கு பிரச்சனை. தற்போது விளம்பர படத்தாலும் அரசுக்கு பிரச்சனையா? பிரதமர் மோடி எனக்கு ஆதரவளித்து இந்த முட்டாள்தனமான தடையை நீக்குவார் என்று நம்புகிறேன் என்று ராக்கி தெரிவித்துள்ளார்.