Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பார்ரா, டாக்டரை அறைந்த பாடகருக்கு யாரு சப்போர்ட் செய்வதுன்னு?
மும்பை: பாடகர் மிகா சிங் டாக்டரை அறைந்தது சரி என்றும், அறை வாங்கிய நபர் குடிபோதையில் இருந்ததாகவும் பார்க்க தீவிரவாதி போன்று தெரிந்ததாகவும் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் பாடகர் மிகா சிங் இரண்டு விஷயங்களுக்கு பெயர் போனவர். ஒன்று அருமையாக பாடுவார், மற்றொன்று அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இசை நிகழ்ச்சியில் மிகா சிங் கலந்து கொண்டு பாடினார்.
அந்த நிகழ்ச்சியின்போது அவர் மேடையில் வைத்து கண் டாக்டர் ஒருவரை அறைந்தார். அந்த வழக்கில் நேற்று அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கூறுகையில்,
அதிர்ச்சி
மிகா சிங் கைது செய்யப்பட்டார் என்பதை அறிந்து அப்படியே நான் ஷாக் ஆகிவிட்டேன். மிகா செய்தது மிகவும் சரியே. அவர் டாக்டரை அறைந்ததில் தவறு எதுவும் இல்லை.
டாக்டர்
நாங்கள் மலேசியாவில் இருந்தபோது மிகாவிடம் டெல்லியில் நடந்த சம்பவம் பற்றிய விவரங்களை கேட்டேன். அப்போது அவர் கூறுகையில், டாக்டர் குடிபோதையில் பெண் கலைஞர்களை கோபமடைய வைத்ததாக தெரிவித்தார்.
மிகா
அந்த டாக்டர் குடிபோதையில் மிகாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பியுள்ளார். அவர் பாதுகாவலர்களை பிடித்து தள்ளிவிட்டு மேடைக்கு வந்துள்ளார். உண்மையான ரசிகராக இருந்தால் நிகழ்ச்சி முடிந்த பிறகு மிகாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கலாமே.
தீவிரவாதி
மிகா அறைந்த டாக்டர் பார்க்க தீவிரவாதி போன்று இருந்தார். யார் கண்டார், அவர் மனித வெடிகுண்டாகக் கூட இருக்கலாம். டாக்டர் விளம்பரத்திற்காக போலீசில் மிகா மீது புகார் கொடுத்ததிருக்கிறார் என்றார் ராக்கி சாவந்த்
ராக்கி
2006ம் ஆண்டு மிகா சிங் தனது பிறந்தநாள் பார்ட்டியில் ராக்கி சாவந்தின் உதட்டில் முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கினார். அவர் எப்படி முத்தம் கொடுக்கலாம் என்று பொங்கி எழுந்த ராக்கி மிகா மீது போலீசில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.