Just In
- 26 min ago
பாய்க்குள் சுருட்டி அனுப்பப்பட்ட ஷிவானி.. சர்ப்ரைஸ் ஆன ஹவுஸ்மேட்ஸ்.. பாலாவை கண்டுக்கவே இல்லையே?
- 1 hr ago
ஒரே செக்கில் Plymouth Car! ராஜ சுலோச்சனா - ரீவைண்ட் ராஜா ஸ்பெஷல்!
- 2 hrs ago
10 லட்சத்துக்கு ஆசைப்பட்டாரா ரியோ? 5 லட்சப் பெட்டியுடன் ஸ்மார்ட்டா எஸ்கேப்பான கேபி.. சூப்பர் கேம்!
- 2 hrs ago
3 மொழிகளில் உருவாகும் 'ஹீரோயின்'.. பாலியல் நடிகை கேரக்டருக்கு ரெடியாகும் பிரபல ஹீரோயின்!
Don't Miss!
- Automobiles
ஜனவரி 26ல் வெளிவரும் புதிய கேடிஎம் பைக்!! அட்வென்ச்சரா? அல்லது ஆர்சி-யா?, விபரம் உள்ளே
- News
அந்த "இலை காலியா இருக்கு பாருங்க.." அன்பான மனசு இருக்கே.. அதுதான் ராகுல் காந்தி.. அசந்து போன மக்கள்!
- Sports
பந்தை எறிந்துவிட்டு.. கோபமாக முறைத்து பார்த்த ரோஹித் சர்மா.. இளம் இந்திய வீரருடன் மோதல்.. பின்னணி!
- Finance
350 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டு வரும் சென்செக்ஸ்.. டாப் 30 நிறுவனங்கள் அதிகச் சரிவு..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
இந்திய இராணுவ தினம் குறித்து தொிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹீரோயினை ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டேன்.. ரக்ஷன் ஃபீலிங்!
சென்னை: நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக ஆகியிருக்கிறது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம். இந்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கியிருக்கிறார்.இந்த படத்தில் துல்கருடன் ரீட்டு வர்மா ,ரக்ஷ்ன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது .படக்குழு இந்த வெற்றியை தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் .படத்தில் நடிகராக அறிமுகமாகியிருந்த விஜே.ரக்ஷ்ன் ரசிகர்கள் பலரின் பாராட்டை பெற்றிருந்தார் .

இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு வெற்றி விழாவின் போது நன்றி தெரிவித்து கொண்டார் ரக்ஷ்ன் .படத்தின் கதையை தாண்டி படத்தின் கதாபாத்திரத்தை தாண்டி துல்கருடன் நடிக்க போவது தான் மிக பெரிய விசயமாக ஆரம்பத்தில் தெரிந்தது என்று ரக்ஷ்ன் கலகலப்பாக கூறினார் .

மேலும் ஒரு பெரிய நடிகர்களின் படத்தில் ஒரு சிறிய நடிகர் நடிக்கும் போது பெரிய அளவு மரியாதை சிறிய நடிகருக்கு கிடைக்காது .அங்கு அந்த பெரிய நடிகர் எது சொன்னாலும் நடக்கும் ஆனால் இங்கு துல்கர் எந்த ஒரு தலைக்கனமும் இன்றி என்னுடன் நடித்தார் .நிறைய காட்சிகளின் படப்பிடிப்பின் போது நான் ஏன் இல்லை என்றும் கேட்டிருக்கிறார் என்று கூறி ரக்ஷ்ன் துல்கருக்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.

மேலும் இந்த படத்தின் படபிடிப்பின் போது ரக்ஷ்ன் உதவி இயக்குனர்களுடன் தான் அதிகபடியான நேரத்தை செலவிட்டாராம்.அந்த அளவுக்கு உதவி இயக்குனர்கள் நண்பர்களாகி விட்டார்கள். நிறைய இடங்களில் நான் எதிர்பாராத உதவியையும் செய்தார்கள் என்று உதவி இயக்குனரை புகழ்ந்தார் ரக்ஷ்ன்.

இந்த படத்தில் நடிக்கும் போது ரீட்டு வர்மாவிற்கு தமிழ் தெரியாதாம் அவருடன் நண்பராக பேச தெரியாமல் பேசி நாயகியை படபிடிப்பு தளத்தில் பலமுறை டார்ச்சர் செய்தாராம் ரக்ஷ்ன் .இதற்காக வெற்றி விழாவின் போது மன்னிப்பும் நன்றியும் தெரிவித்து கொண்டார் ரக்ஷ்ன் . இது விஜே ரக்ஷ்னுக்கு முதல் படமாகும் விஜய் தொலைகாட்சியின் பல தொகுப்பாளர்கள் நடிகர்களாக திரையுலகில் அசத்தியிருக்கிறார்கள்.இவரின் முதல் படமே நல்ல பெயரை இவருக்கு பெற்று தந்துள்ளதால் மேலும் இவருக்கு படவாய்ப்புகள் குவிய அதிகம் வாய்ப்புள்ளது