twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் பட்ஜெட் சர்ச்சையில் சிக்கிய பிரம்மாண்ட இயக்குநர்: கதிகலங்கி நிற்கும் ‘ஆர்ஆர்ஆர்’ பட ஹீரோ!

    |

    ஐதராபாத்: தமிழ்த் திரையுலகில் பிரம்மாண்டத்துக்கு பெயர் பெற்றவர் இயக்குநர் ஷங்கர்.

    Recommended Video

    Vijay Sethupathi Trend-ஐ 1950-லே செய்த Sivaji Ganesan*Cinema

    இவரது படங்களில் காட்சிகள், பாடல்கள் என அனைத்துமே மிகப் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும்.

    ஷங்கர் தற்போது கமலின் இந்தியன் 2 படத்தையும், ராம் சரணின் RC15 படத்தையும் இயக்கி வருகிறார்.

    Thiruchitrambalam Day 3 Box Office: வெற்றியை ருசித்த தனுஷ்.. வசூல் வேட்டையாடும் திருச்சிற்றம்பலம்! Thiruchitrambalam Day 3 Box Office: வெற்றியை ருசித்த தனுஷ்.. வசூல் வேட்டையாடும் திருச்சிற்றம்பலம்!

    பிரம்மாண்டத்தின் உச்சம் ஷங்கர்

    பிரம்மாண்டத்தின் உச்சம் ஷங்கர்

    .ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர், அடுத்தடுத்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், ஐ, 2.O என பிரம்மாண்டமான படங்களை இயக்கி ரசிகர்களை மிரள வைத்தவர். படத்தில் கதையே இல்லையென்றாலும் அதை படமாக்குவதிலும், அந்தப் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளிலும் பிரம்மாண்டத்தை கொட்டித் தீர்த்து, ரசிகர்களை பார்க்க வைத்துவிடுவார். இதனாலேயே அவருக்கு பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயர் வந்தது.

    இறங்கு முகத்தில் ஷங்கர்?

    இறங்கு முகத்தில் ஷங்கர்?

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த சிவாஜி திரைப்படம் வசூலில் மாஸ் காட்டியது. அதன் பின்னர் எந்திரன் மட்டுமே வசூலில் ஒரளவு கைகொடுத்தது என சொல்லப்படுகிறது. ஐ, 2.O ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கமலுடன் 'இந்தியன் 2' படத்தை தொடங்கினார் ஷங்கர். ஆனால், இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் 3 உதவி இயக்குநர்கள் உயிரிழக்க படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதோடு பட்ஜெட்டையும் குறைக்க வேண்டும் என, லைக்கா நிறுவனம் ஷங்கரிடம் வலியுறுத்த, சிக்கல்கள் இன்னும் அதிகமாகின. இதனால் இந்தியன் 2 சூட்டிங் கிடப்பில் கிடக்க, தற்போது மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ஷங்கர்

    அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ஷங்கர்

    இந்தியன் 2 ஷூட்டிங் நிறுத்தப்பட்டதால், இந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் படத்தின் ரீமேக்கை எடுக்க திட்டமிட்டார் ஷங்கர். ஆனால், கதை உரிமை விவகாரத்தில் 'அந்நியன்' பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் ஷங்கருக்கும் இடையில் பிரச்சினை எழுந்தது. அதனால், அந்நியன் இந்தி ரீமேக் திட்டம் அப்படியே கைவிடப்பட்டது.

    தில் ராஜூவுடன் கருத்து வேறுபாடு

    தில் ராஜூவுடன் கருத்து வேறுபாடு

    இதனால், தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க கமிட் ஆனார் ஷங்கர். தற்காலிகமாக RC 15 என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, தில் ராஜூ தயாரித்து வருகிறார். மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக படத்தில் இரண்டு கலை இயக்குநர்கள் மாறிவிட்டதாகவும், தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த சுரேந்தர் ரெட்டி என்பவரும் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

    ஒரு பாட்டுக்கு 7 கோடி

    ஒரு பாட்டுக்கு 7 கோடி

    ஒரு பாடலுக்கு ரஷ்யாவில் இருந்து 100 ரஷ்ய பெண்களை இறக்குமதி செய்த ஷங்கர், அதுக்காக மட்டுமே 7 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாகவும், இதனால், தில் ராஜூ கடுப்பானதாகவும் தெரிகிறது. அதேபோல், கல்லூரி செட் அமைத்து படமாக்க வேண்டும் என்று ஷங்கர் கேட்டதாகவும், அதற்கு உண்மையான கல்லூரியிலேயே படமாக்கலாம் என தில் ராஜூ கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஷங்கர் கல்லூரியை செட் அமைத்து படமாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    படப்பிடிப்பு நிறுத்தம்?

    படப்பிடிப்பு நிறுத்தம்?

    இந்நிலையில், திட்டமிட்ட பட்ஜெட்டைவிட ஏற்கனவே அதிகம் செலவாகி விட்டதால் தில் ராஜு இன்னும் கல்லூரி செட் அமைக்க ஓக்கே சொல்லவில்லை என தெரிகிறது. இதனிடையே தெலுங்கு திரையுலகில் வேலை நிறுத்தமும் தொடங்கியது. மேலும், ஷங்கர் தற்போது இந்தியன்-2 படத்தை தொடங்கவுள்ளார். இந்தப் படம் முடித்த பின்னர் தான் 'RC 15' வேலைகள் தொடங்கும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகின்றன.

    கலக்கத்தில் ராம் சரண்

    கலக்கத்தில் ராம் சரண்

    ராஜமெளலி இயக்கத்தில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் மாஸ் காட்டிய ராம் சரண், இப்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருவதால் உற்சாகத்தில் இருந்தார். ஆனால், ஷங்கர் - தில் ராஜூ இடையேயான பிரச்சினையால் இப்போது ராம் சரண் கலக்கத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் கடந்த சில வருடங்களாகவே இயக்குநர் ஷங்கர் பட்ஜெட் தொடர்பான சர்ச்சைகளில் சிக்கி வருவது, அவரது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Shankar is directing the new film starring Telugu leading actor Ram Charan. Shankar and producer Dil Raju reportedly disagreed with the budget for the film.( தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கான பட்ஜெட் விவகாரத்தில் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜூ இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. )
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X