Peddi Day 6 Box Office - பெத்தி 6வது நாள் வசூல் வேட்டை.. பாக்ஸ் ஆஃபிஸில் கெத்து காண்பிக்குது
சென்னை: ராம் சரண் இயக்கத்தில் புச்சி பாபு சனா இயக்கியிருக்கும் பெத்தி திரைப்படம் கடந்த நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்திருந்தார். படத்துக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு இருப்பதால் நாளுக்கு நாள் அதன் வசூலும் அதிகரிக்கிறது. இந்நிலையில் ஆறாவது நாளான நேற்று படம் செய்திருக்கும் வசூல் குறித்து தெரியவந்திருக்கிறது.
ராம் சரண் பான் இந்தியா ஹீரோக்களில் ஒருவர். பெரிய மார்க்கெட்டை வைத்திருக்கும் அவர் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து சூடு போட்டுக்கொண்டார். அதனால் ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய நிலைமை உருவானது. அதனையடுத்து புச்சி பாபு சனா இயக்கத்தில் பெத்தி திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார். இதில் ஜான்வி கபூர் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

பிரமாண்ட ரிலீஸ்: படமானது உலகம் முழுவதும் பிரமாண்டமாக கடந்த நான்காம் தேதி ரிலீஸானது. ஏற்கனவே படத்தின் மீது ஹைப் எகிறியிருந்ததால் ரிலீஸான நாள் முதலே கூட்டம் தியேட்டர்களில் அலை மோதியது. முதல் நாள் முதல் காட்சி பார்த்த ராம் சரண் ரசிகர்களுக்கு படம் ஆத்ம திருப்தியை கொடுத்திருக்கிறது. ஆனால் பொதுவான ரசிகர்களோ படத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
என்ன பிரச்னை?: இது முரளிகாந்த் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். ஏற்கனவே ஹிந்தியிலும் சந்து சாம்பியன் என்ற பெயரில் வந்திருந்தது. இப்போது தெலுங்கில் எடுக்கப்பட்டிருப்பதால் அந்த மொழிக்கு தேவையான மசாலாவை எல்லாம் தூவி இயக்குநர் இப்படத்தை செய்திருந்தார். ஆனால் அந்த மசாலாவே ரசிகர்களுக்கு கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. கிரிக்கெட் சண்டை காட்சியெல்லாம் நம்பும்படியே இல்லையே என்று புலம்பி தள்ளுகிறார்கள்.
இன்னொரு சர்ச்சை: இது போதாதென்று படத்தில் ஜான்வி கபூர் தொடர்பான காட்சிகளும் பெரிய சர்ச்சையை கிளப்பின. அவரை ஒரு கவர்ச்சி பொம்மையாக மட்டுமே இந்தப் படத்தில் இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார்; ரொம்பவே பிற்போக்குத்தனமாக இருக்கிறது என புச்சி பாபுவை விளாசி தள்ளினார்கள். நிலைமை கைமீறி போவதை உணர்ந்த அவர்; மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தவறுகள் எல்லாம் சரி செய்யப்படும் எனவும் சில நாட்களுக்கு முன்பு உறுதி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வசூல் நிலவரம்: இப்படி பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களையே படம் பெற்றுவந்தாலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி, ஆறாவது நாளான நேற்று அந்தப் படம் இந்தியாவில் மொத்தம் 9 கோடியே 65 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறதாம். ஐந்தாவது நாள் வசூலை (12.5 கோடி ரூபாய்) ஒப்பிடுகையில் இது குறைவுதான்.வெளிநாடுகளில் நேற்று அந்தப் படம் ஒரு கோடி ரூபாயை வசூலித்ததாம். ஆகமொத்தம் இப்படம் ஆறு நாட்களில் 261 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
