Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'எஸ் என்கிற பெண்ணும், ஈ என்கிற ஆணும்..' சர்ச்சை இயக்குனரின் அடுத்த அதிரடி.. சசிகலா பெயரில் சினிமா!
சென்னை: சசிகலா என்ற பெயரில் படம் எடுக்கப்போவதாக பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா அறிவித்துள்ளார்.
Recommended Video
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து படம் இயக்குபவர், இயக்குனர் ராம் கோபால் வர்மா.
கொரோனா லாக்டவுனிலும் நேக்கட், க்ளைமாக்ஸ் ஆகிய கிளுகிளு படங்களை இயக்கி, தான் தொடங்கியுள்ள ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்தார்.
உண்மைச் சம்பவம்
அடுத்து 'த்ரில்லர்' என்ற படத்தை இயக்கினார். இதற்கிடையே அர்னாப் கோஸ்வாமி பற்றியும் படம் இயக்கப் போவதாகக் கூறியிருந்தார். அதற்கு முன், மர்டர் என்ற படத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்தக் கதை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
சர்ச்சை கருத்து
சோசியல் மீடியாவில் அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்புபவர் இவர். இதற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்வார். இவர் இப்போது, 'சசிகலா' என்கிற பெயரில் படம் இயக்கப் போவதாக புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
எஸ் என்கிற பெண்
தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா புகைப்படங்களை பதிவிட்டு, 'சசிகலா என்ற படத்தை இயக்க இருக்கிறேன். எஸ் என்கிற பெண்ணும், ஈ என்கிற ஆணும் ஒரு தலைவரை என்ன செய்தார்கள் என்பது பற்றிய கதை இது. தமிழக தேர்தலுக்கு முன் இந்தப்படம் வெளியாகும்.
|
சதிகள் நிறைந்த
அந்தத் தலைவியின் பயோபிக் வெளியாகும் அதே நாளில் வெளியாகும். லக்ஷ்மியின் என் டி ஆர் திரைப்படத்தைத் தயாரித்த ராகேஷ் ரெட்டி தயாரிக்கிறார். இந்தப் படம் ஜே, எஸ் மற்றும் ஈ பி எஸ் ஆகியோருக்கு இடையே இருந்த சிக்கலான, சதிகள் நிறைந்த உறவைப் பற்றியக் கதை.
கொல்ல முடியும்
நெருக்கமாக இருக்கும்போதுதான் எளிதாக கொல்ல முடியும் என்பது தமிழ் பழமொழி என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு ட்விட்டரில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார் சசிகலா என்பது குறிப்பிடத்தக்கது.
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே