Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு மிரட்டல்: வீடு, அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு
சர்ச்சையே உந்தன் பெயர் ராம் கோபால் வர்மாவோ என்று கூறும் அளவுக்கு சர்ச்சைகளில் சிக்குபவர் இந்த இயக்குனர். அவர் ஏதாவது கருத்து தெரிவித்தால் கூட அது பெரும் சர்ச்சையில் முடிந்துவிடும்.
இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால் யார், என்ன மிரட்டல் விடுத்தார்கள் என்பதை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டார்கள்.
இது குறித்து ராம் கோபால் வர்மா ட்விட்டர் கூறுகையில்,
பல காரணங்களால் மும்பை போலீசார் எனக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். என்ன மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதை நான் தெரிவிக்க முடியாது. இந்த மிரட்டல் சத்யா 2 படம் தொடர்பாக விடுக்கப்பட்டதா என்பதையும் என்னால் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
வர்மாவின் சத்யா படத்தின் இரண்டாம் பாகமான சத்யா 2 இன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது நவம்பர் 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மும்பை நிழல் உலகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வரும் சத்யா என்பவரைச் சுற்றி தான் கதை நகரும்.