twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு மிரட்டல்: வீடு, அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

    By Siva
    |

    Ram Gopal Varma gets police security after receiving threats
    மும்பை: இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவருக்கு யார், என்ன மிரட்டல் விடுத்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

    சர்ச்சையே உந்தன் பெயர் ராம் கோபால் வர்மாவோ என்று கூறும் அளவுக்கு சர்ச்சைகளில் சிக்குபவர் இந்த இயக்குனர். அவர் ஏதாவது கருத்து தெரிவித்தால் கூட அது பெரும் சர்ச்சையில் முடிந்துவிடும்.

    இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால் யார், என்ன மிரட்டல் விடுத்தார்கள் என்பதை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டார்கள்.

    இது குறித்து ராம் கோபால் வர்மா ட்விட்டர் கூறுகையில்,

    பல காரணங்களால் மும்பை போலீசார் எனக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். என்ன மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதை நான் தெரிவிக்க முடியாது. இந்த மிரட்டல் சத்யா 2 படம் தொடர்பாக விடுக்கப்பட்டதா என்பதையும் என்னால் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    வர்மாவின் சத்யா படத்தின் இரண்டாம் பாகமான சத்யா 2 இன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது நவம்பர் 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    மும்பை நிழல் உலகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வரும் சத்யா என்பவரைச் சுற்றி தான் கதை நகரும்.

    English summary
    Police security have been provided at the office and residence of Bollywood filmmaker Ram Gopal Varma after he received a threat, the police said in Mumbai on Friday. However, the police chose to remain silent about details like who threatened him and what sort of threat was issued to him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X