Don't Miss!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகையின் சொத்தை பறித்துக் கொண்டேனா?: சரத்பாபு விளக்கம்
சென்னை: நடிகை ரமா பிரபாவின் வீட்டை பறித்துக் கொண்டதாக எழுந்த புகார் குறித்து நடிகர் சரத்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சரத் பாபு 1980களில் நடிகை ரமா பிரபாவுடன் லிவ் இன் முறைப்படி வாழ்ந்தார். அதன் பிறகு அவரை பிரிந்து நடிகர் நம்பியாரின் மகள் சினேகாவை திருமணம் செய்தார். பின்னர் சினேகாவை விவாகரத்து செய்தார்.
இந்நிலையில் சரத்பாபு தன் வீட்டை பறித்துக் கொண்டதாக ரமா பிரபா புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து சரத்பாபு கூறியிருப்பதாவது,
மனைவி இல்லை
1990ம் ஆண்டு சினேகாவை திருமணம் செய்து கொண்டேன். அதற்கு முன்னர் நான் நடிகை ரமா பிரபாவுடன் சேர்ந்து வாழ்ந்தேன். அவரை நான் திருமணம் செய்யவில்லை. அதனால் அவர் என் முதல் மனைவி கிடையாது.
சினிமா
நான் பிறந்ததில் இருந்தே வசதி படைத்தவன். நான் ஏன் ரமா பிரபாவின் வீட்டை அபகரிக்க வேண்டும்?. கே. பாலசந்தர் சார் என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஹீரோவாக அறிமுகமாகி 40 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறேன்.
சரத் பாபு
ரூ. 60 கோடி மதிப்புள்ள விவசாய நிலத்தை விற்று சென்னை உமாபதி தெருவில் வீடு ஒன்றை வாங்கினேன். அந்த வீட்டில் வசிக்குமாறு ரமா பிரபாவிடம் கூறினேன். பின்னர் அந்த வீட்டை திரும்ப வாங்கிக் கொண்டேன்.
புகார்
என் வீட்டை நான் திரும்ப வாங்கிக் கொண்டேன். இதில் என்ன தவறு. என் பெயரை கெடுக்க நினைத்து தான் ரமா பிரபா என் மீது புகார் தெரிவித்து வருகிறார் என்று சரத்பாபு தெரிவித்துள்ளார்.