Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எதிர்ப்பு எதிரொலி: வேலையில்லா பட்டதாரியில் சர்ச்சை வசனம் நீக்கம்
வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டு விட்டதாக படத்தின் இயக்குநர் வேல்ராஜ் கூறியுள்ளார்.
தனுஷ், அமலாபால் ஜோடியாக நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் ராம கிருஷ்ணா மிஷன் பள்ளி பற்றி அவதூறு வசனம் இடம் பெற்றுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பின.
சர்ச்சைக்குரிய வசனம்
வேலை இல்லாமல் இருக்கும் தனுஷ் தனது தந்தையிடம் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் தன்னை படிக்க வைத்ததால் வேலை கிடைக்கவில்லை என்றும், தம்பியை செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் படிக்க வைத்ததால் வேலை கிடைத்துள்ளது என்றும் பேசுவது போல் படத்தில் வசனம் உள்ளது.
வசனத்திற்கு எதிர்ப்பு
ராமகிருஷ்ணா பள்ளி நிர்வாக்தினரும், மாணவர்களும் இந்த வசனத்தை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
தனுஷ் வீடு முற்றுகை
ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷ் வீட்டில் தமிழ்நாடு இந்து மகா சார்பில் முற்றுகை போராட்டமும் நடைபெற்றது.
தனுஷ்க்கு கடிதம்
சேலம் ராமகிருஷ்ணா மினஷன் ஆசிரம செயலாளர் சுவாமியதாத்மானந்தரும் வசனத்தை நீக்கும்படி தனுசுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து ராம கிருஷ்ண மிஷன் பள்ளி பற்றி சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டது.
வசனம் நீக்கம்
இது குறித்து வேலையில்லா பட்டதாரி இயக்குனர் வேல்ராஜ் கூறும் போது, யாரையும் புண்படுத்த வேண்டும் என்று உள்நோக்கத்தில் அந்த வசனத்தை படத்தில் வைக்கவில்லை.
இவ்வளவு பெரிய பிரச்சினை ஏற்படும் என்றும் சிந்திக்கவில்லை. மக்கள் உணர்வுகளை மதிக்கிறோம். சர்ச்சைக்குரிய வசனம் இனி படத்தில் இருக்காது என்று கூறியுள்ளார்.