Don't Miss!
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
புருஷனைக் கேட்டால் எந்தப் பெண்ணாவது கொடுப்பாளா?-ரமலத்தின் தோழி கடும் சாடல்
நயனதாராவின் பிடியிலிருந்து பிரபுதேவாவை மீட்க சட்டப் போராட்டத்தில் குதித்துள்ளார் ரமலத். இதற்கு அவருக்கு உதவியாக இருந்து வருகிறார் ஜெயந்தி கண்ணப்பன். இவர் ரமலத்தின் குடும்பத் தோழி ஆவார். அத்தோடு சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மறைந்த கவியரசர் கண்ணதாசனின் அண்ணன் ஏஎல் சீனிவாசனின் மருமகள் இவர்.
ரமலத் விவகாரம் குறித்து ஜெயந்தி கூறுகையில், "நயன்தாராவுக்கு வெளி உலக அனுபவம் இல்லை. குறிப்பிட்ட வளையத்துக்குள் இருக்கிறார். அவர் வெளியே வந்து உலகத்தை பார்க்க வேண்டும். பசிக்கிறது என்று கேட்டால் சாதம் கொடுக்கலாம். புருஷனை கேட்டால் எந்த பெண்ணாவது கொடுப்பாளா?
நயன்தாரா சிறந்த நடிகை. தமிழக ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். இங்குள்ள கலாசாரம் மீது அவர் கொள்ளி வைப்பது அழகல்ல. ரம்லத் கோர்ட்டுக்கு போய் உள்ளார். அவருக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்," என்றார் ஜெயந்தி.