Don't Miss!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Finance மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - வைப்புநிதி திட்டம்: எதில் அதிக வரி சலுகை பெற முடியும்?
- Automobiles எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
புருஷனைக் கேட்டால் எந்தப் பெண்ணாவது கொடுப்பாளா?-ரமலத்தின் தோழி கடும் சாடல்
நயனதாராவின் பிடியிலிருந்து பிரபுதேவாவை மீட்க சட்டப் போராட்டத்தில் குதித்துள்ளார் ரமலத். இதற்கு அவருக்கு உதவியாக இருந்து வருகிறார் ஜெயந்தி கண்ணப்பன். இவர் ரமலத்தின் குடும்பத் தோழி ஆவார். அத்தோடு சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மறைந்த கவியரசர் கண்ணதாசனின் அண்ணன் ஏஎல் சீனிவாசனின் மருமகள் இவர்.
ரமலத் விவகாரம் குறித்து ஜெயந்தி கூறுகையில், "நயன்தாராவுக்கு வெளி உலக அனுபவம் இல்லை. குறிப்பிட்ட வளையத்துக்குள் இருக்கிறார். அவர் வெளியே வந்து உலகத்தை பார்க்க வேண்டும். பசிக்கிறது என்று கேட்டால் சாதம் கொடுக்கலாம். புருஷனை கேட்டால் எந்த பெண்ணாவது கொடுப்பாளா?
நயன்தாரா சிறந்த நடிகை. தமிழக ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். இங்குள்ள கலாசாரம் மீது அவர் கொள்ளி வைப்பது அழகல்ல. ரம்லத் கோர்ட்டுக்கு போய் உள்ளார். அவருக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்," என்றார் ஜெயந்தி.