twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செக் மோசடி: ரம்பா கோர்ட்டில் ஆஜராகவில்லை செக் மோசடி தொடர்பான வழக்கில் நடிகை ரம்பா நேற்று சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த வழக்குஅடுத்த மாதம் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகை ரம்பா சொந்தமாக "த்ரீ ரோசஸ் என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படம் தோல்வி அடைந்தது. இதனால் ரம்பா கடும்பண நெருக்கடியில் சிக்கினார்.படத்தை தயாரிக்க ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து ரம்பா கடன் வாங்கியுள்ளார். இந் நிலையில், இந்தப் பணத்தைத் திருப்பித் தருவதற்காக ரூ.50 லட்சம், ரூ. 25 லட்சம் என ரூ. 75 லட்சத்துக்கு இரண்டு காசோலைகளை ரம்பா, அந்த நிதி நிறுவனத்திற்கு வழங்கியிருந்தார்.ஆனால் இந்த காசோலைகளும் ரம்பாவின் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி விட்டது. இதைத் தொடர்ந்து அந்த நிதி நிறுவனத்தின் சார்பில்தணிகைவேல் என்பவர் செக் மோசடி வழக்கை சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளில் ஆஜராகாமல் இருந்து வந்தார் ரம்பா. இந் நிலையில் கடந்த முறை நடந்த விசாரணையின் போதும் ரம்பாவரவில்லை. இதையடுத்து ரம்பா மீது கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக ரம்பா நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.ஆனால் நேற்று அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. நீதிமன்றப் பணிகளை வழக்கறிஞர்கள் புறக்கணித்துள்ளதால் இவ்வழக்குஅடுத்த மாதம் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பபட்டுள்ளது.

    By Staff
    |

    செக் மோசடி தொடர்பான வழக்கில் நடிகை ரம்பா நேற்று சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த வழக்குஅடுத்த மாதம் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    நடிகை ரம்பா சொந்தமாக "த்ரீ ரோசஸ் என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படம் தோல்வி அடைந்தது. இதனால் ரம்பா கடும்பண நெருக்கடியில் சிக்கினார்.

    படத்தை தயாரிக்க ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து ரம்பா கடன் வாங்கியுள்ளார். இந் நிலையில், இந்தப் பணத்தைத் திருப்பித் தருவதற்காக ரூ.50 லட்சம், ரூ. 25 லட்சம் என ரூ. 75 லட்சத்துக்கு இரண்டு காசோலைகளை ரம்பா, அந்த நிதி நிறுவனத்திற்கு வழங்கியிருந்தார்.

    ஆனால் இந்த காசோலைகளும் ரம்பாவின் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி விட்டது. இதைத் தொடர்ந்து அந்த நிதி நிறுவனத்தின் சார்பில்தணிகைவேல் என்பவர் செக் மோசடி வழக்கை சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளில் ஆஜராகாமல் இருந்து வந்தார் ரம்பா. இந் நிலையில் கடந்த முறை நடந்த விசாரணையின் போதும் ரம்பாவரவில்லை. இதையடுத்து ரம்பா மீது கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக ரம்பா நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

    ஆனால் நேற்று அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. நீதிமன்றப் பணிகளை வழக்கறிஞர்கள் புறக்கணித்துள்ளதால் இவ்வழக்குஅடுத்த மாதம் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பபட்டுள்ளது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X