Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கணவருடன் சேர்ந்தவுடன் முதல் வேலையாக திருப்பதி கோவிலுக்கு சென்ற ரம்பா
ஹைதராபாத்: நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் மகள்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆன நடிகை ரம்பா 2 பெண் குழந்தைகளுக்கு தாய்.
இந்நிலையில் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் சென்னைக்கு வந்தார்.
கோர்ட்
கணவரை பிரிந்து வந்த பிறகு அவருடன் சேர்த்து வைக்கக் கோரி ரம்பா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணவன், மனைவியை கலந்து பேசி சமாதானமாகுமாறு கூறியது.
சமாதானம்
ரம்பாவும், கணவரும் கலந்து பேசி சமாதானம் ஆனதால் அந்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ரம்பா பழையதை மறந்து கணவருடன் சேர்ந்துவிட்டார்.
கோவில்
கணவருடன் சேர்ந்த மகிழ்ச்சியில் ரம்பா குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து குடும்பத்தை சேர்த்து வைத்ததற்கு நன்றி கூறியுள்ளார்.
ரம்பா
கோவிலுக்கு கணவர், மகள்களுடன் வந்த ரம்பா மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். கணவரின் கையை பிடித்துக் கொண்டு பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தார்.