Don't Miss!
- News பேலஸ்ட்லெஸ் டிராக்.. புல்லெட் ரயிலுக்கான வழித்தடம் இப்படித்தான் இருக்க போகுது.. வெளியான புகைப்படம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
இதுக்கு முன்னால பார்க்காத பிரச்னையா? அதெல்லாம் சினிமா கம்பீரமா மீண்டு எழும்.. பிரபல ஹீரோ நம்பிக்கை!
சென்னை: சினிமாத்துறை, இந்த இக்கட்டான நிலைமைகளில் இருந்து மீண்டு எழும் என்று பிரபல ஹீரோ தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழில், மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி, வசந்தகால பறவை, டூயட், சதி லீலாவதி, பஞ்சதந்திரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ரமேஷ் அரவிந்த்.
ஏராளமான கன்னடப் படங்களிலும் நடித்துள்ள இவர், இந்த இக்கட்டான நிலையில் இருந்து சினிமாதுறை மீண்டு எழும் என்று தெரிவித்துள்ளார்.
திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. நடிகர் விஷால் போட்டியில்லை.. களமிறங்கியது இன்னொரு டீம்!
உயிரிழப்பு
சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் ஒன்றரை லட்சம் பேரை பலி வாங்கியுள்ளது. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரஸுக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
வீட்டுக்குள் முடக்கம்
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை நேற்று 16 ஆயிரத்தை தாண்டியது. கொரோனாவால் நேற்று மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 519 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
ஷூட்டிங் ரத்து
இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா, டிவி படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் சினிமா துறை மீண்டும் எழுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்கள் வீடுகளில் அடைந்துகிடப்பதால் டி.வி.பார்ப்பதிலும் ஆன்லைனில் படங்கள் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முதல் முறையல்ல
இதனால் தியேட்டருக்கு வந்து அவர்கள் படம் பார்ப்பார்களா? என்று சந்தேகம் எழுவதாக சினிமா துறையினரே கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரமேஷ் அரவிந்த், இந்த இக்கட்டான நிலையில் இருந்து சினிமா கண்டிப்பாக மீளும் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, சினிமா துறைக்கு இது போன்ற பிரச்னைகள் முதல் முறையல்ல.
லாக்டவுன் முடிந்ததும்
இதனால், ஆனந்த் ஷங்கர் வேறு தயாரிப்பாளரைத் தேடி வந்தார். மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் செவன்ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித்குமார், இதைத் தயாரிக்க இருப்பதாகவும் விஷாலுக்குப் பதில் சிம்பு நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் விஷாலே இந்த படத்தில் நடிப்பதாகவும் வினோத்குமார் படத்தை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. லாக்டவுன் முடிந்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.