Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
ராம் கோபால் வர்மாவின் 'நான்தான்டா'!
பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள நான்தான்டா படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
சமூகத்தின் ஒழுங்கு குறைந்து குற்றங்கள் அதிகரிக்கக் காரணம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்தான். இந்த விஷச் சூழல் வெவ்வேறு ரூபங்களில் வெளிப்பட்டு கொண்டே தான் இருக்கும்.
இன்றைய சமுதாயத்தின் பிரதிநிதியான நாயகன் 'நான்தான்டா' என்று தன்னை முன்னிலைப்படுத்துவதையே தலைப்பாக்கிவிட்டார்களாம்.
இந்தப் படம் சில ஆண்டுகளுக்கு முன் வர்மா இயக்கி வெளிவந்த சத்யா படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகத்தில் சக்ரவர்த்தி நடித்திருந்தார். இந்த இரண்டாம் பாகத்தில் சர்வானந்த் நடிக்கிறார்.
வர்மாவின் மாஸ்டர் பீஸ் என்று வர்ணிக்கப்படும் படம் இந்த சத்யா. இரண்டாம் பாகத்தை இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் எடுக்கிறார்.
தமிழ், தெலுங்கில் நடிப்பது சர்வானந்த். இந்தியில் படத்தின் பெயர் சத்யா 2. தமிழில், நான்தான்டா... என்று வைத்திருக்கிறார்.
இதற்கு முன் தான் இயக்கிய சிவா படத்தை தமிழில் உதயம் என வெளியிட்டு பெரும் வெற்றி பெற்றார். ஆனால் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்த போது வர்மா சறுக்கியது நினைவிருக்கலாம்.