"தமிழ்நாட்டு மக்கள் எல்லோருடைய ஓட்டும் ரஜினிக்கு தான்.." - இயக்குநரின் சர்ச்சை ட்வீட்!
Recommended Video

மும்பை : சர்ச்சை இயக்குனர் என அழைக்கப்படும் ராம்கோபால் வர்மா மீண்டும் ட்விட்டருக்கு வந்திருக்கிறார்.
அவர் படங்களை தாண்டி அவர் போடும் ஒவ்வொரு ட்வீட்டும் சர்ச்சையாகும். அவரது ட்வீட்டால் இதுவரை பல சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
சினிமாக்காரர்களின் பல விஷயங்களை எதிர்க்கும் ராம் கோபால் வர்மா ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு தனது ஆதரவை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை இயக்குநர்
இந்தி திரையுலகில் பரபரப்பான இயக்குனராக இருந்த ராம்கோபால் வர்மா இப்போது கொஞ்சம் அமைதி காக்கிறார். அவ்வப்போது தமிழ்நாட்டு அரசியல் பக்கமும், திரையுலகப் பக்கமும் திரும்பி சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிடுவார்.
ரஜினிக்கு வரவேற்பு
ராம் கோபால் வர்மா ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு "இதுபோல் ஒரு வரவேற்பை பார்த்ததில்லை. என்னுடைய கணிப்புப்படி தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அவருக்கு ஓட்டளிப்பார்கள். கண்டிப்பாக இது மற்ற கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.
பவனுக்கு தைரியம் இல்லை
ரஜினிகாந்தைப் போலவே பவன் கல்யாணும் ஆந்திராவில் அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தலில் நிற்க வேண்டும். அப்படி அவர் நிற்கவில்லை என்றால் ரஜினிகாந்த் போல ஒரு தைரியம் பவனுக்கு இல்லை என அவரது ரசிகர்கள் நினைத்து விடுவார்கள்.

பவனை வம்பிழுக்கும் வர்மா
அந்த சூப்பர் ஸ்டார் போல நம் சூப்பர் ஸ்டாருக்குத் தைரியமில்லை என்பது தெலுங்கு மக்களுக்கு அவமானமானது. அப்படி அவர் நிற்கவில்லை என்றால் ரஜினிகாந்த் போல சூப்பர் ஸ்டார் ஆக இல்லாமல் சாதாரண ஸ்டார் ஆகத்தான் பவன் கல்யாண் இருக்கிறார் என தெலுங்கு மக்களும், ரசிகர்களும் நினைத்துக் கொள்வார்கள்.

வந்த உடனே சர்ச்சை
அவருடைய பதிவில் குறிப்பிட்டு பவன் கல்யாணை வம்புக்கு இழுத்திருக்கிறார்.
அதற்கு பவன் கல்யாண் ரசிகர்கள் சரியான பதிலடி கொடுத்து வருகிறார்கள். சில மாதங்கள் ட் விட்டரை விட்டு போனவர் மீண்டும் வந்து பெரிய சர்ச்சையை ஆரம்பித்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











