Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சிவாஜி சிலையை கடற்கரையில் வைத்தாலும் மணிமண்டபத்தில் வைத்தாலும் சம்மதமே! - ராம்குமார்
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை எங்கு வைத்தாலும் சம்மதமே. அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் நாங்கள் கட்டுப்படுகிறோம் என்று சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் கூறியுள்ளார்.
இன்று சிவாஜியின் 16வது நினைவு தினம். இதையொட்டி திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் சிவாஜிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இன்று சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் அளித்த பேட்டியில், "நடிகர் திலகம் சிவாஜி சிலையை எங்கு அமைத்தாலும் சந்தோஷம்தான்.
தமிழக அரசு அமைத்துள்ள சிவாஜி மணி மண்டபம் விரைவில் திறக்கப்பட இருக்கிறது.
அரசும், அதிகாரிகளும் எங்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறார்கள். முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.
அப்பா மறைந்து 16 ஆண்டுகள் ஆனாலும் அவர் எல்லோர் மனதிலும் அவர் நிறைந்து இருக்கிறார். அவரது சிலையை கடற்கரையில் அமைத்தாலும் மகிழ்ச்சி. மணி மண்டபத்தில் அமைத்தாலும் மகிழ்ச்சிதான். அரசு, நீதிமன்றம் ஆகியவற்றுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்," என்றார்.