அவர ஆடியன்ஸுக்கு பிடிக்குதா பிடிக்கலையா? ஷிவானியுடன் தீவிர டிஸ்கஷன்.. மண்டைக்காயும் ரம்யா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெறுவது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து நாமினேஷனில் ஆஜித், ஷிவானி, கேபி ஆகியோர் இடம் பெற்றிருப்பது தெரியவந்தது.

ஷிவானி ரம்யா டிஸ்கஷன்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் கார்டன் ஏரியாவில் ஷிவானியும் ரம்யாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இருவரும் முழுக்க முழுக்க ஆரியை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பிடிக்குதா? பிடிக்கலையா?
அதாவது, ஷிவானியிடம் பேசும் ரம்யா, ஆரி வந்து எல்லாமே கரெக்ட்டா பண்ணனும்னு நினைச்சு பண்றாரு. அது ஆடியன்ஸுக்கு பிடிக்குதா பிடிக்கலையான்னு எனக்கு ஒரு டவுட் எப்போதுமே இருக்கும்.

புடிக்கும்னு தோனல
நேத்து வந்த காலுமே எனக்கு அந்த டவுட்லதான் இருக்கு. புடிச்சுதுங்றமாதிரி எனக்கு எந்த ஆங்கிள்லேயும் தோனல என்று கூறுகிறார். இதனைக் கேட்ட ஷிவானி, குரூப்பிஸம் இருக்குன்னு செல்றதெல்லாம் சிலதெல்லாம் எனக்கு கரெக்ட்டா சொல்றாரு.

என்ன கேப் கிடைச்சாலும்..
அவருக்குன்னு ஒன்னு வரப்போ, என்ன பண்றாரு செல்பிஷா மத்தவங்களை பிளேம் பண்ணி விட்டுடுறாரு என்று கூறுகிறார். அதற்கு பதில் சொல்லும் ரம்யா, கிடைக்கிற கேப்பில் எல்லாம் தன்னுடைய பிளஸையும் மத்தவங்களோட மைனஸையும் சொல்லிடுறாரு. என்ன கேப் கிடைச்சாலும் மத்தவங்களை இன்சல்ட் பண்ணிடுறாரு என்கிறார்.

அந்நியன் அம்பி
அதற்கு பதில் சொல்லும் ஷிவானி, தன்னை காப்பாத்திக்க மத்தவங்களை தப்பா புரஜெக்ட் பண்றாரு என்று கூறுகிறார். இப்படியாக உள்ளது இன்றைய இரண்டாவது புரமோ. நேற்றைய எபிசோடில் ஆரியிடம் பேசிய காலர் அந்நியன் படத்தில் வரும் அம்பி கேரக்டர் எப்போதும் ரூல்ஸ், ரெகுலேஷன் பற்றி பேசுவார் ஆகையால் அவரை யாருக்கும் பிடிக்காது என்றார்.

மண்டைக்காயும் ரம்யா
அதுகுறித்து நேற்றைய எபிசோடிலேயே ரம்யா, பாலாஜி மற்றும் ஆஜித்துடன் விவாதித்து ஆரியை கேலியும் கிண்டலுமாய் விமர்சித்தனர். இந்நிலையில் இன்று ஷிவானியுடனும் அதே டிஸ்கஷனை செய்து மண்டை காய்ந்திருப்பதை வெளிப்படுத்தியுள்ளார் ரம்யா.


Click it and Unblock the Notifications











