படே மியான் அமிதாப்புடன் மீண்டும் கை கோர்க்கும் படையப்பா நீலாம்பரி..தமிழில்
Recommended Video

சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன், அமிதாப் பச்சன் படத்தில் வில்லியாக நடிக்கவுள்ளார்.
தனது சொந்த பெயரை விட , தான் நடித்த கதாபாத்திரங்களின் பெயரால் அழைக்கப்பட்ட நடிகைகள் ஒரு சிலரே. அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் ரம்யா கிருஷ்ணன்.

நீலாம்பரி கதாபாத்திரமும் சரி, ராஜமாதா கதாபாத்திரமும் சரி, இவரை தவிர வேறு ஒருவரை அந்த பாத்திரத்தில் நினைத்து கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியவை இவை.

இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படமும், ரம்யா கிருஷ்ணனுக்கு பெயர் சொல்லும் வகையில் அமைந்தது. இதனையடுத்து, சூட்டோடு சூடாக அடுத்த தமிழ் படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்

அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கும் உயர்ந்த மனிதன் படத்தில், அமிதாப்புக்கு வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ரம்யா. இந்த படத்தில் அமிதாப்போடு எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார். கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார்

ரம்யாவும், அமிதாப்பும் கடந்த 1998-ம் ஆண்டு பதே மியான் சோட்டே மியான் என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 20 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்


Click it and Unblock the Notifications











