Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தீவிர அரசியலில் கவனம்.... கல்யாணத்திற்கு அவசியம் இல்லை - குத்து ரம்யா
சென்னை: ரம்யாவுக்கு இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை, அவர் இப்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்துகிறார் என்று அவருடைய தாயார் கூறியுள்ளார்.
குத்து படம் மூலம் அறிமுகமானவம் ரம்யா. குத்து ரம்யா என்று அழைக்கப்பட்ட அவர் கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்தவர். தெலுங்கு, கன்னட மொழிப்படங்களில் ஏராளமாக திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை ரம்யா அதன் பின் திவ்யா ஸ்பந்தனா என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
கடந்த 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ரம்யா. அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் சமூக வலைதளப் பிரிவு தலைவியாக செயல்பட்டார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 17ஆவது லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா எங்கு இருக்கிறார் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
இந்நிலையில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ரபேலுடன் நடிகை ரம்யாவுக்கு துபாயில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் பரவின. பின்னர் திருமணம் ரத்தானது. இதற்கு நடிகை ரம்யாவின் அம்மா ரஞ்சிதா பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது நடிகை ரம்யாவுக்கு திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை. திருமணம் குறித்து நடிகை ரம்யா முடிவு செய்தால் அதுபற்றி வெளிப்படையாக கூறுவோம். அவருடைய திருமணத்தை மூடி மறைத்து ரகசியமாக நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.
அதோடு நடிகை ரம்யாவும் ரபேலும் நிதானமாக பேசி முடிவெடுத்த பின்பு தான் பிரிந்தார்கள் என்றும், நடிகை ரம்யா இப்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார், ரபேலும் தனது தொழிலில் கவனம் செலுத்திகிறார். மேலும் ரம்யாவுக்கு இந்தியாவை விட்டு செல்ல விருப்பம் இல்லை.
இருப்பினும் அவர்கள் இன்னும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறார்கள். அவருடைய குடும்பத்தினரும், நாங்களும் தொடர்பில் தான் இருக்கிறோம் என்றும் வேறு ஏதும் தகவல் வந்தால் நாங்களே கூறுவோம். அதனால் நடிகை ரம்யாவின் திருமணம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் ரம்யாவின் அம்மா ரஞ்சிதா கூறினார்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அந்த மாதிரி படங்களை எல்லாம் பார்க்கமாட்டேன்.. ஆனால் நடிப்பேன்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்