Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஊசி போடும் போதும் சிரிக்கிறீங்களே எப்படிங்க.. ரம்யா பாண்டியனிடம் ஜாலியாக ரகளை செய்த ரசிகர்கள்!
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், கட்டாயம் தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள் என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ரஜினி – மோகன்பாபு சந்திப்பு...அப்படி என்ன தான் நடந்தது ?
ஊசி போடும் போதும் எப்படிங்க சிரிக்கிறீங்க என ரசிகர்கள் ரம்யா பாண்டியனிடம் ஜாலியாக கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வது மட்டுமே ஒரே தீர்வு என தொடர்ந்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் பிரபலங்கள் அறிவித்து வருகின்றனர். சினிமா நட்சத்திரங்களை தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர்.
ஊசி போட்டால் தான் அனுமதி
ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியும் என சினிமா தொழிலாளர்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.
தடுப்பூசி போட்டுக்கிட்டேன்
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி, குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லக்ஷ்மி உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், தற்போது பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ரம்யா பாண்டியன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நான் என் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன் என ரம்யா பாண்டியன் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
ஊசி போடும் போதும் சிரிப்பு
ஊசி போடும் போது வலிக்கும் என்பதால் பெரும்பாலும் பலரும் பல்லைக் கடித்துக் கொண்டும், அமைதியாக வலியைத் தாங்கிக் கொண்டு ஊசி போட்டுக் கொள்வார்கள். ஆனால், ஊசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தில் ரம்யா பாண்டியன் சிரித்ததை பார்த்த ரசிகர்கள், எப்படிங்க ஊசி போடும் போதும் சிரிக்கிறீங்க என கேள்வி எழுப்பி ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
நல்லவேளை ஊசி தெரியுது
மேலும், சிலர் நல்லவேளை ஊசி தெரியும் படி போட்டோ போட்டு இருக்காங்க, இல்லைன்னா ஊசியே போடலைன்னு கிளப்பி விட்டுருப்பாங்க என சமீபத்தில் நயன்தாராவின் தடுப்பூசி போடும் போட்டோ வைரல் மீமானதை வைத்தும் கமெண்ட்டுகள் பறந்து வருகின்றன.
ரம்யா பாண்டியன் அட்வைஸ்
கொரோனா தடுப்பு ஊசியை செலுத்திக் கொண்ட நடிகை ரம்யா பாண்டியன், ரசிகர்களிடம் அனைவரும் கூடிய சீக்கிரமே கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள், அது மட்டும் தான் நம்மை இந்த கொடிய நோயில் இருந்து காப்பாற்றும். மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால், பழைய படி இயல்பாக நம்மால் நடமாட முடியும் என்றும், பணி செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.