Don't Miss!
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- News விஜயகாந்த்தை.. ஏக்கத்துடன் தேடுகிறது சென்னை சாலிகிராமம் ரோடு.. அந்த விபூதி எங்கே? கசியுதே நினைவு
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாலா மாமா.. பாலா மாமான்னு அவரதான் என்டெர்டெய்ன் பண்றா.. ஷிவானியை பங்கம் பண்ணிய ரம்யா.. அதகள புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாய் நடைபெற்று வந்த மணிக்கூண்டு டாஸ்க் இன்றுடன் நிறைவடைகிறது.
இதில் வெற்றி பெற்ற டீம் எது என்பது குறித்து பிக்பாஸ் அறிவிப்பதும் கேப்டன் டாஸ்க்கில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து அறிவிப்பதும் இன்றைய முதல் புரமோவில் தெரியவந்தது.
புரணி பேசும் ரம்யா
இந்நிலையில் இன்றைய எபிசோடின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் பெட்ரூமில் அமர்ந்து ரம்யா பாண்டியன், சம்யுக்தா மற்றும் ஆஜித் ஆகியோர் பேசுவதாக உள்ளது.
உன் மனசுல தோன்றுவது யார்?
அப்போது போரிங் பர்ஃபாமன்ஸ் குறித்து அவர்கள் மூன்று பேரும் பேசுகிறார்கள் என தெரிகிறது. அப்போது ஆஜித்திடம் உன் மனசுல தோன்றுவது யார்? என்று கேட்கிறார் ரம்யா பாண்டியன்.
எதுவும் பண்ணல
அதற்கு எனக்கு சுச்சி மற்றும் ஷிவானிதான்னு தோன்றுகிறது என்கிறார் ஆஜித். உடனே சம்யுக்தா ஷிவானி என்ன பண்ணா என்று கேட்க, அவர் எதுவும் பண்ணல என்பதற்காகதான் சொல்கிறார் என பதிலளிக்கிறார் ரம்யா பாண்டியன்.
பாலா மாமா பாலா மாமான்னு
தொடர்ந்து பேசும் ரம்யா பாண்டியன், ஷிவானி, பாலாவை என்டெர்டெய்ன் பண்ணும் ஒரே வேலையைதான் ஃபுல்டைம்மா பண்ணிட்டுருக்கா. பாலா மாமா பாலா மாமான்னு நீங்க சுத்துறீங்க.. வீட்ல இந்த இன்வால்மென்டையும் சுவாரசியத்தையும் காட்டினீங்கன்னு சொன்னிங்கன்னா உடனே ஜஸ்டிஃபிகேஷனுக்கு வந்துருவாங்க என்று கலாய்க்கிறார்.
சூப் சாங் - சிங்கிள்ஸ் கேங்
தொடர்ந்து ஷிவானி பேசுவதை போன்றே பேசி காட்டி சிரிக்கிறார் ரம்யா. பாலாஜியுடன் பிரேக்கப் ஆன பிறகு சம்யுக்தா மற்றும் ரம்யாவுடன் சேர்ந்துதான் சூப் சாங் பாடினார். பாலாவை விட்டு பிரிந்து வந்த, ஷிவானியை வெல்கம் டூ சிங்கிள்ஸ் கேங் என்று வரவேற்றார் ரம்யா.
ரொமான்டிக் டான்ஸ்
ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே பாலாவுடன் சமாதானமானார் ஷிவானி. யாருக்கும் தெரியாமல் பாத்ரூமுக்குள் இருவரும் ரொமான்டிக் டான்ஸ் ஆடினர். தொடர்ந்து பாலாஜியும் ஷிவானியும் நெருக்கமாகவே இருந்து வருகின்றனர்.
எச்சரித்த பாலாஜி
பாலாஜி ஷிவானி இடையிலான காதலை குறிப்பிட்டு, ஏற்கனவே காதல் பாலாஜியின் கண்ணை மறைக்குது என ஆரி நாமினேஷனுக்கான காரணமாக கூறினார். அதனால் கடுப்பான பாலாஜி, இங்கு யாரும் காதல் பண்ணல என்னை யாரும் அப்படி பேசக்கூடாது என எச்சரித்தார்.
தவிக்கும் ஷிவானி
ஆனாலும் ஷிவானியை ஊறுகாய்யாய் பயன்படுத்தி வருகிறார் பாலாஜி என்று குற்றம் சாட்டி வரும் நெட்டிசன்கள் அவரிடம் இருந்து தப்பித்து விடுங்கள் என ஷிவானிக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். இருந்த போதும் ஷிவானியால் பாலாஜியை விட்டு விலக முடியவில்லை.