முன்னாள் காதலரின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்திய நடிகை
மும்பை: தனது முன்னாள் காதலரான நடிகர் ரன்பிர் கபூரின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளார் நடிகை கத்ரீனா கைஃப்.
பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தற்போது நடிகை ஆலியா பட்டை காதலித்து வருகிறார். முன்னதாக அவர் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபை காதலித்தார். 7 ஆண்டுகள் ஒன்றாக இருந்த அவர்கள் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் கத்ரீனா சல்மான் கானின் தம்பி அர்பாஸ் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது அவரிடம் நீங்கள் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு வைத்து அடுத்தவர்களை கண்காணிக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது.
அதற்கு கத்ரீனாவோ, எனக்கு போலி கணக்கு இல்லை. ஆனால் ரன்பிர் கபூருக்கு உண்டு என்றார். இன்ஸ்டாகிராமை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததே ரன்பிர் தான் என்றார்.
கத்ரீனா கடந்த 2017ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் சேர்ந்தார். தற்போது அவரை இன்ஸ்டாகிராமில் 21.5 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராமை அறிமுகம் செய்து வைத்த ரன்பிர் கபூரை கத்ரீனா போட்டுக் கொடுத்துள்ளார்.
ரன்பிர் காதலித்து வரும் ஆலியா பட்டும், கத்ரீனாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











