twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரன்பிரின் அம்மாவுக்கு தீபிகாவை கண்டாலே எரிச்சலாக வருமாமே

    By Siva
    |

    மும்பை: ரன்பிர் கபூரின் அம்மா நீத்துவுக்கு தீபிகா படுகோனேவை கண்டாலே பிடிக்காதாம்.

    ரன்பிர் கபூர் நடிக்க வந்த புதிதில் தீபிகா படுகோனேவை காதலித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்துவிட்டனர். அவர்கள் பிரிந்ததற்கு ரன்பிரின் அம்மா நீத்து கபூர் தான் காரணம் என்று கூறப்பட்டது.

    ஆனால் ரன்பிரோ தானும், தீபிகாவும் பிரிந்ததற்கு தனது அம்மா காரணம் இல்லை என்று கூறினார். இந்நிலையில் நீத்து உண்மையை தெரிவித்துள்ளார்.

     தீபிகா படுகோனே

    தீபிகா படுகோனே

    ரன்பிர் சினிமாவில் நடிக்கத் துவங்கியபோது அவனுடைய ஒரு காதலியை பார்த்து நான் கோபப்படுவேன். அந்த பெண்ணால் என் மகன் சரியாகத் தூங்காமல் இருந்தான். ஒரு நடிகர் புத்துணர்வாகத் தெரிய வேண்டும் என்றால் நல்ல தூக்கம் வேண்டும் அல்லவா என்று நீத்து தெரிவித்துள்ளார். அவர் மறைமுகமாக தீபிகாவைத் தான் தெரிவித்துள்ளார்.

    ஓவர் அதிகாரம்

    ஓவர் அதிகாரம்

    தீபிகா ரன்பிரை காதலித்த நேரத்தில் அவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று தங்குவாராம். ரன்பிர் வெளியே சென்றுவிட்டாலும் தீபிகா அவரது வீட்டில் இருந்து கொண்டு வேலையாட்களை ஓவராக அதிகாரம் செய்வாராம். ஏதோ வீட்டின் எஜமானி போன்று தீபிகா அதிகாரம் செய்தது நீத்துவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லையாம்.

    மகனுக்காக

    மகனுக்காக

    தீபிகாவை கண்டாலே நீத்துவுக்கு பிடிக்காவிட்டாலும் மகனுக்காக அதை வெளிக்காட்டாமல் இருந்துள்ளார்.

    பிரிந்ததில் மகிழ்ச்சி

    பிரிந்ததில் மகிழ்ச்சி

    ரன்பிர் தீபிகாவை விட்டு பிரிந்ததில் நீத்துவுக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

    English summary
    Neetu Kapoor in a recent interview told that she used to get angry with a certain girlfriend of her son. That certain girlfirend she is referring is none other than Deepika Padukone.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X