தெய்வீக தேவதையுடன் ஒரு காமக் காதல்.... ரங் ரசியா!
ஒவ்வொரு காதலுமே அழகானதுதான்.. வண்ணமயமானதுதான்.. இதயங்களின் ஆரத் தழுவல்.. எப்போதும் சுகமானதும் கூட.
இந்த அழகான காதலை, காமம் தழுவிய காதலை ரங் ரசியா படத்தில் அழகாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் கேத்தன் மேத்தா.
சுகதா என்ற தனது மனம் கவர்ந்த காதல் தேவதையுடன் காதல் மயக்கத்தில் மூழ்கித் திளைத்த ராஜா ரவிவர்மாவின் கதைதான் இந்த ரங் ரசியா. ஆனால் இந்தக் காதல், காமம் மிகுந்தது... பல மலர்களைச் சுவைக்கும் ஒரு காமுக காதல் கதையும் கூட.
சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும்.. இந்த வண்ணமயமான வரலாற்றுக் காதலை ஒரு ரீவிசிட் செய்வோம்.. படங்களின் கோர்வையுடன்.. நம்முடைய வார்த்தைகளின் துணையோடு!

உன்னில் என்னை..!
கண் மூடி உன்னுள் உள்ள உன் காதலை என்னுள் இழுக்கிறேன்.. என்னுடனேயே இருந்து விடு.. என்று கண்மூடிச் சொல்கிறாரோ சுகதா...!

வெப்ப மூச்சில் என்னை பொசுக்கி விடு
உன் காதலும் என் காதலும் வண்ண வானில் சிறகடித்துப் பறக்கட்டும்.. அதற்கு முன்பு உன் வெப்பக் காற்றில் என்னைப் பொசுக்கி விடு என்று கெஞ்சுகிறாரோ சுகதா...

உள்ளம் தழுவியது போதும்
உள்ளங்கள் தழுவிக் கொண்டது போதும்.. என்னை நீயும், உன்னை நானும் தீண்டும் நேரம் இது....

நீயா அல்லது தீயா..!
இந்தக் காந்தக் கண்ணில் தெரிவது நீயா அல்லது என்னை கொளுத்திப் போட வைக்கும் தீயா... கேட்பது ரவிவர்மா...!

ஆரோகணம்
இது என்ன வகையான ஆரோகணம்.. அலை மோதும் மனங்களுடன் கூடிய இவர்களுக்கு மட்டுமே தெரிந்தது.. புரிந்தது!

தெய்வீக தேவதையே...!
காதல் தெய்வீகமானது.. ஆனால் என் தேவதையான நீயோ.. தெய்வீகத்தையும் தாண்டிய தேவ மங்கை!

இந்த இதழ் போதும்
ரோஜா இதழ்கள் காத்திருக்கட்டும்.. என் ராஜ தேவதையின் இதழ் அமுதம் முதலில் எனக்குள் போகட்டும்...!

பூச்சூடும் நேரம்
உன் கேசத்தை அலங்கரிக்கும் நறுமணப் பூ.. என் மனதை மருக வைக்கும் உன் இதழ் விரிப்பு....!

தொட்டு விடும் தூரத்தில் உன் தேகம்
மனதின் தீண்டல் என்னவோ என்றைக்கோ நடந்து விட்டது.. உன் தேகத்தின் தீண்டலுக்காக காத்திருக்கிறது என் தூரிகை...!

நீயும் மீட்டு.. நானும் மீட்டுகிறேன்
வீணையை நீ மீட்டு.. உன்னை நான் மீட்டுகிறேன். இணைந்து படிப்போம் காதல் ராகத்தை....!

ஏங்கித் தவிக்கும் நீ...!
என்னுள் இருக்கும் என்னவளே.. எங்கு போனாய்.. ஏங்கித் தவிப்பது நான் அல்ல.. என்னுள் இருக்கும் நீயும்தான்!


Click it and Unblock the Notifications











