Don't Miss!
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இது எப்ப...? இந்தி சினிமாவில் அறிமுகமாகிறார் ரங்கராஜ் பாண்டே!
Recommended Video
சென்னை: பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, இந்தி படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.
பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகராக அறிமுகமானார். இதை ஹெச். வினோத் இயக்கியிருந்தார். இந்தி நடிகை வித்யா பாலன், ஸ்ரத்தா ஶ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம் உட்பட பலர் இதில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.
போனி கபூரின் ஸீ ஸ்டூடியோஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தில் சத்யமூர்த்தி என்ற வழக்கறிஞராக நடித்திருந்தார் ரங்கராஜ் பாண்டே. அவர் வேடத்துக்கு வரவேற்புக் கிடைத்தது.
இதையடுத்து அவர், ரஜினிகாந்த் தொடங்கும் அரசியல் கட்சியில் சேரப்போவதாகவும் இது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அது பற்றி எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் அவர் மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே இந்தி படத்திலும் அறிமுகமாகிறார்.
இயக்குனர் சுசிகணேசன், தமிழில் இயக்கிய திருட்டுப் பயலே படத்தை இந்தியில் இயக்கினார். அடுத்து திருட்டுப் பயலே 2 படத்தை தமிழில் இயக்கினார். இந்தப் படமும் தமிழில் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதையும் இந்தியில் இயக்குகிறார்.
இதில், பாபி சிம்ஹா நடித்த கேரக்டரில் வினீத்குமார் சிங், அமலா பால் கேரக்டரில் ஊர்வசி ராட்டெலா, பிரசன்னா நடித்த அபிஷேக் ஓபராய் நடிக்கின்றனர். லக்னோ மற்றும் வாரணாசியில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. இதில், தமிழில் இயக்குனர் சுசி கணேசன் நடித்த கேரக்டரில் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். அவர் நடித்த காட்சிகள் லக்னோவில் படமாக்கப்பட்டது.