Don't Miss!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
3 புதிய இயக்குனர்களுடன் களம் இறங்கும்… பா.இரஞ்சித்
சென்னை : 5 புதிய படங்களை தயாரிக்க இருப்பதாக பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார். இதில் 3தயாரிப்பு நிறுவனங்கள் 3 புதிய இயக்குனர்கள் 2 வெற்றி இயக்குனர்களும் களத்தில் இறங்க உள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
இயக்குனர் பா.இரஞ்சித் சிறந்த தயாரிப்புகளை நீலம் தயாரிப்பின் மூலம் கொடுத்து வருகிறார். அவர் தயாரித்த பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டுள்ளது.
குண்டு படம் வெற்றி பெற்றதையடுத்து பா.இரஞ்சித் தனது அடுத்த முயற்றியில் இறங்கி உள்ளார் . கோல்டன் ரேசியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டல் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் நீலம் தயாரிப்பு இணைந்து 5 புதிய படங்களை தயாரிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். அதற்கான ஊடக சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது, அதில், அந்த 5 இயக்குனர்களையும் பா.இரஞ்சித் அறிமுகப்படுத்தினார்.
பரியேரும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் தற்போது தனுஷ் படம் ஒன்றை இயக்க உள்ளார் அதன் பிறகு 2020ல் இந்த மூன்று தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் பணியாற்ற உள்ளார் .
இதற்கடுத்து இயக்குனர் லெனின் பாரதி இவர் விஜய் சேதுபதி தயாரிப்பின் கீழ் மேற்கு தொடர்சிமலை படத்தை இயக்கியவர் இவரும் ஒரு முக்கிய படத்தை இயக்க உள்ளார் .
அடுத்ததாக மூன்று புதிய இயக்குனர்கள் களம் இறங்குகிறார்கள் அகிரன் மோசஸ் பிராங்கிளின் மற்றும் சுரேஷ் மாரி ஆகியோர். லிட்டில் ரெட் கார் பிலிம்ஸின் அதிதி ஆனந்த அப்போது பேசினார். நான் பா.இரஞ்சித்தின் மிக பெரிய ரசிகன் நான் இவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார் மேலும் கோல்டன் ரேசியோ பிலிம்ஸ் சிங்கப்பூரில் இருந்து படங்களை வினியோகிஸ்தம் செய்வது மற்றும் படங்களை தயாரித்தும் இருக்கிறது இந்த நிறுவனம்.
பா.இரஞ்சித்தின் இந்த புதிய முயற்றியை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இவரது தயாரிப்பில் அடுத்தடுத்து 5 படங்கள் வர இருப்பது பெருமகிழ்ச்சி என்று பலரும் தெரிவிக்கின்றனர்.