நித்யானந்தா உத்தரவு இல்லாம நடிக்கமாட்டாராம் ரஞ்சிதா!

தெலுங்கில் கம்யம் 2 நபடத்தை இயக்கியவர் பிரவீன் ஸ்ரீ. இப்போது காளி சரண் என்ற படத்தை இயக்குகிறார். 80 களில் நடந்த நிஜ சம்பவத்தை வைத்து உருவாகும் கதையாம் இது.
இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ரஞ்சிதாவை அனுகியுள்ளார் பிரவீண். கதை கேட்ட ரஞ்சிதாவுக்கு கேரக்டர் பிடித்துப் போனதாம். ஆனால்... நித்யானந்தாவின் அனுமதி இருந்தால்தான் நான் நடிக்க முடியும். எனவே என்னால் எதுவும் இப்போது சொல்ல முடியாது என்று கூறிவிட்டாராம்.
இதனால் இயக்குநர் பிரவீனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லையாம்.
ஜெயில், வழக்குகள், மதுரை ஆதீன சர்ச்சைகள் என சிகத்கலில் இருக்கும் நித்தியானந்தாவிடம் இவர் எப்போது அனுமதி வாங்கி, எப்போது தன் படத்தில் நடிப்பது என்ற கடுப்பில் வேறு நடிகைகளையும் பரிசீலித்து வருகிறாராம் பிரவீண்!


Click it and Unblock the Notifications











