Don't Miss!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வைரல் வீடியோவால் 8 ஆண்டுகள் கழித்து பாடகியை சந்தித்த மகள்
Recommended Video
மும்பை: பாடகி ரணு மோண்டல் 8 ஆண்டுகள் கழித்து தனது மகளை சந்தித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ரனகாட் ரயில் நிலையத்தில் அமர்ந்து லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை அழகாக பாடிய மூதாட்டி ரணு மோண்டலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
அந்த வீடியோவை பார்த்து பாலிவுட் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மய்யா தனது படத்தில் ரணுவை ஒரு பாடல் பாட வைத்துள்ளார். ரணு தன் படத்திறாக பாட்டு பாடியபோது அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஹிமேஷ்.
View this post on InstagramA post shared by Himesh Reshammiya (@realhimesh) on
இருக்க இடமின்றி இருந்த ரணுவுக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ. 55 லட்சத்திற்கு வீடு வாங்கிக் கொடுத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ரணு தனது மகள் ஸ்வாதியை 8 ஆண்டுகள் கழித்து சந்தித்துள்ளார்.
ரணு தனது மகளை 8 ஆண்டுகளாக பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை. இந்நிலையில் அம்மா பெரிய பிரபலமாகிவிட்டதை பார்த்த ஸ்வாதி அவரை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.
Saaho Review : பிரபாஸ், பிரம்மாண்டம், மாஸ் ஆக்ஷன்.. ஓஹோ இல்லை இந்த சாஹோ..! - விமர்சனம்
தனது புது வாழ்க்கை குறித்து ரணு கூறியதாவது,
நான் சும்மா பாடிக் கொண்டிருந்தேன். ஆனால் தற்போது எனக்கு முறையே பயிற்சி அளித்து படத்தில் பாட வைத்துள்ளார்கள். ஹிமேஷ்ஜி என்னை தன் குடும்பத்தில் ஒருத்தியாக பார்த்தார். நான் நினைத்துக் கூடப் பார்க்காத வாய்ப்பை அளித்துள்ளார். என் கனவு நினைவானதற்காக கடவுளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
எனக்கு சிறு வயதில் இருந்தே பாசம் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது பலரும் என்னிடம் அன்பாக நடந்து கொள்வதை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது. பாலிவுட் படத்தில் பாடுவேன் என்று நான் கனவில் கூட நினைத்தது இல்லை. ஆனால் அது நடந்துவிட்டது என்றார்.