Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சூர்யா ஜோடி? 'அடுத்த தமிழ்ப் படத்தில் கமிட் ஆகிட்டேன், ஆனா..' சஸ்பென்ஸ் வைக்கிறார் நடிகை ராஷ்மிகா!
சென்னை: அடுத்த தமிழ் படத்தில் கமிட் ஆகிவிட்டேன் என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் இருந்து தெலுங்குக்கு சென்ற அவர், அங்கு டாப் ஹீரோயினாக இருக்கிறார்.
விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதகோவிந்தம் கவனிக்கப்பட்டதை அடுத்து அதிக படங்களில் நடித்து வருகிறார்.
பெரிய ஹீரோ
தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவான மகேஷ்பாபு ஜோடியாக, சரிலேரு நீக்கெவ்வரு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி, சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவருக்கு பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.
ஆடலூ மீக்கு ஜோகார்லு
இப்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இதை சுகுமார் இயக்குகிறார். செம்மரக் கடத்தல் தொடர்பான கதையை கொண்ட இந்தப் படத்தில் சித்தூர் பகுதி பெண்ணாக, நடிக்கிறார், ராஷ்மிகா. இதற்கிடையே தெலுங்கு ஹீரோ சர்வானந்த் நடிக்கும் ஆடலூ மீக்கு ஜோகார்லு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
சுல்தான் ரிலீஸ்
இதையடுத்து மேலும் 2 தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் அதன் ரிலீஸ் தள்ளிப் போய் இருக்கிறது.
நேஷனல் க்ரஷ்
இதற்கிடையே அவர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியானது. இதுபற்றி படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், 2020 ஆம் வருடத்தின் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்ற பெருமையை பெற்றிருந்தார். இதற்காக அவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பாராட்டித் தள்ளினர்.
பாலிவுட் அறிமுகம்
இதற்கிடையே, ராஷ்மிகா பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாயின. அதன்படி மிஷன் மஞ்சு என்ற படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார். ஷாந்தனு பாஹி இயக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
அமிதாப்புடன் நடிப்பு
இந்நிலையில் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். விகாஷ் பால் இயக்கும் இந்தப் படத்தில் அவர் அமிதாப் பச்சனுடன் நடிக்கிறார். அப்பா - மகள் பற்றிய கதையான இதில் நீனா குப்தா உட்பட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு டெட்லி என்ற தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளனர்.
தமிழில் 2 வது படம்
இந்நிலையில், சமூக வலைதளத்தில், ரசிகர்களின் கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்த ராஷ்மிகா மந்தனா, சுல்தானுக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் கமிட் ஆகிவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால், அந்தப் படம் பற்றி இப்போது சொல்லமாட்டேன் என்றும் சுல்தான் ரிலீஸுக்கு பிறகுதான் அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்