Don't Miss!
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹைதராபாத்தில் இரவு நேர படப்பிடிப்பு பணிகள்.. படக்குழுவுடன் இணையவுள்ள ராஷ்மிகா!
சென்னை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் புஷ்பா.
இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். வில்லனாக ஃபகத் பாசில் நடிக்கிறார்.
சாரி ஆந்தாலஜி...போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ள இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.
பெரும் எதிர்பார்ப்பு
அல்லு அர்ஜுன் அலா வைகுந்தபுரம்லோ படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் நடித்து வருகிறார். சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஷ்மிகா இந்த படத்தில் நடிக்கிறார். ரங்கஸ்தலம் படத்துக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பெரிய பட்ஜெட்
இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு வனப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இரண்டு பாகங்களாக எடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் மொத்தமாக ரூபாய் 250 கோடி முதல் 270 கோடி வரை செலவாகலாம் என்று கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 13 வெளியீடு
ஆந்திரப் பிரதேச வனப்பகுதிகளில் நடைபெறும் செம்மரத் திருட்டைச் மையமாக வைத்து இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாகும் என படக்குழு முன்னரே தெரிவித்தது. பாகம் இரண்டு அடுத்த வருடம் வரவுள்ளது.
ஹைதராபாத்தில் படப்பிடிப்பு
ராஷ்மிகா Good bye படத்தில் நடித்து முடித்த கையோடு புஷ்பா படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்தின் இரவு நேர படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சூழ்நிலை சரியாக அமைந்தால் திட்டமிட்டபடி படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.