பூனை குட்டியை மடியில் வைத்து க்யூட் போஸ்..இதயத்தை பரிசளிக்கும் ரசிகர்கள் !
சென்னை : இந்தியாவிலேயே எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்காத பெருமை ரஷ்மிகாவுக்கு கிடைத்ததை அடுத்து சந்தோசமாக சிறகடித்து பறந்து வருகிறார்.
Recommended Video
தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மட்டுமே ரஷ்மிகா இதுவரை நடித்து வந்த நிலையில் தமிழில் முதன்முறையாக சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.
இதற்கிடையில் இவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருவதை அடுத்து இப்போது கையில் பூனை குட்டியுடன் செம க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

சந்தோஷத்தில்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் பக்கத்தில் "நேஷனல் க்ரஸ் ரஷ்மிகா" என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானதைத் தொடர்ந்து உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்த ரஷ்மிகா இப்பொழுது அந்த சந்தோஷத்தில் சிறகடித்து பறந்து வருகிறார்.

கார்த்தி கதாநாயகனாக
தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் இதுவரை வெளியாகாத போதிலும் பெரும் ரசிகர்களை கொண்டுள்ள இவர் முதன்முறையாக நடித்துள்ள நேரடி தமிழ் திரைப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வர அந்தத் திரைப்படத்திற்கு சுல்தான் என பெயரிடப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட பொருட்செலவில்
சுல்தான் திரைப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில் இந்த திரைப்படம் மிக விரைவில் திரையில் வெளியாகும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், சுல்தான் திரைப்படம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வருகிறது என சொல்லப்படுகிறது.

முகத்தை சுருக்கி போஸ்
இவ்வாறு நேஷனல் க்ரஸ்ஸாக பலராலும் ரசிக்கப்பட்டு வரும் ரஷ்மிகா இப்பொழுது தான் ஆசையாக வளர்க்கும் பூனைக்குட்டியை கையில் வைத்துக் கொஞ்சியவாறு பூனையைப் போலவே க்யூட்டாக முகத்தை சுருக்கி போஸ் கொடுத்திருக்கும் இந்த அழகான புகைப்படத்திற்கு ரசிகர்கள் அந்த பூனையாக நான் இருக்கக் கூடாதா என ஏங்கியவாறு அன்பை லைக்குகளாக குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











