twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த ஹீரோவுக்கு பாடி கார்டாக இருக்க விரும்புகிறேன்... நடிகை ரஷ்மிகா மந்தனா!

    |

    சென்னை : இந்தியாவின் நேஷனல் க்ரஷ் என்ற பெயருடன் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரஷ்மிகா மந்தனா.

    தென்னிந்தியாவை தொடர்ந்து பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

    ஏப்ரல் 2 வெளியாகும் சுல்தான்.. சிங்கப்பூர், இலங்கையில் அமோக வரவேற்பு! ஏப்ரல் 2 வெளியாகும் சுல்தான்.. சிங்கப்பூர், இலங்கையில் அமோக வரவேற்பு!

    இந்தநிலையில் முன்னணி நடிகர் ஒருவருக்காக சவால் ஒன்றை செய்து காட்டியதோடு அவருக்கு பாடிகார்டாக இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    தெறிக்கவிடும் பிளாக்பஸ்டர்

    தெறிக்கவிடும் பிளாக்பஸ்டர்

    அறிமுகமான குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனா சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் நடித்த படங்கள் தெறிக்கவிடும் பிளாக்பஸ்டர் வெற்றிகளை பெற அம்மணிக்கு பாலிவுட்டிலும் மவுசு கூடிப்போனது.

    ப்ரமோஷனுக்காக புஷ்-அப்ஸ்

    ப்ரமோஷனுக்காக புஷ்-அப்ஸ்

    இதன் காரணமாக அடுத்தடுத்து இரண்டு பாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் நாகார்ஜுனாவின் வைல்ட் டாக் திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக புஷ்-அப்ஸ் செய்து அசத்திய வீடியோ ஒன்றை பதிவிட்டது தொடர்ந்து வைரல் ஆனது.

    சேலஞ்சை செய்துகாட்டி

    சேலஞ்சை செய்துகாட்டி

    அதிரடி ஆக்ஷன் சண்டை காட்சியுடன் உருவாகியிருக்கும் வைல்ட் டாக் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் ப்ரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வர அதில் ஒன்றாக "வைல்ட் டாக் புஷ்அப்" என்ற சேலஞ்சை பிரபலங்களும் ரசிகர்களும் செய்துகாட்டி வீடியோவை வெளியிட வேண்டும் என படக்குழு கேட்டுக் கொண்டிருந்தது.

    வைல்ட் டாக் புஷ்அப்

    வைல்ட் டாக் புஷ்அப்

    ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் பலர் இந்த சேலஞ்சை செய்து காட்டியதோடு அதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு இருக்க நடிகை ரஷ்மிகா மந்தனாவும் "வைல்ட் டாக் புஷ்அப்"
    சேலஞ்சை செய்து காட்டி கெத்து காட்டியதோடு அந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இதை பார்த்த நடிகர் நாகார்ஜுனா வாவ் என வியந்து கமெண்ட் செய்துள்ளார்.

    கடினமாக உழைத்து

    கடினமாக உழைத்து

    அதற்கு ரஷ்மிகா மந்தனா "சார்ர்ர்ர்ர்ர்! இப்பொழுதும் கடினமாக உழைத்துக் கொண்டு இருக்கிறேன் உங்களுக்கு பாடி கார்டாக நியமிக்கப்படுவேன் என்று" இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மேலும் வரும் வெள்ளிக்கிழமை நாகார்ஜுனாவின் "வைல்ட் டாக் " ரிலீஸாகும் அதே தேதியில் ரஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் சுல்தான் படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Rashmika Mandhana wants to be a bodyguard for Actor Nagarjuna
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X