Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
காட்டுமிராண்டித்தனமா இருக்கு.. கொரோனா பாதிப்பு நமக்கு தேவைதான்.. பொங்கிய மாஸ்டர் ரைட்டர்!
சென்னை: மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை செய்ய வந்த சுகாதார பணியாளர்களை கல்லெறிந்து விரட்டிய மக்களை பார்த்து கொதித்து போய் ட்வீட் போட்டுள்ளார் மாஸ்டர் பட ரைட்டர் ரத்னகுமார்.
Recommended Video
மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்திற்கு வசனம் எழுதி உள்ளார்.
இரண்டாவது கணவர் மீது கோபமாக இருக்கும் அமலா பால்.. என்ன காரணம் தெரியுமா? இன்றை டாப் 5 பீட்ஸில்!
சமூக வலைதளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் ரத்னகுமார், தளபதி ரசிகர்களுக்கு மாஸ்டர் அப்டேட்டை அவ்வப்போது கொடுத்து வந்து, ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்.
கொரோனா பாதிப்பால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டுள்ள நிலையில், கொரோனா குறித்த விழிப்புணர்வு பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் ரத்னகுமார் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், ANIல் வெளியிடப்பட்ட, செய்தியை பார்த்து அதிர்ந்து போய் ட்வீட் போட்டுள்ளார் ரத்னகுமார்.
Where is Humanity.? Why are we Barbaric. It's so heartbreaking to see this 💔. Sometimes I get a feeling like we deserve this virus to teach us something. #CoronavirusOutbreakindia https://t.co/sx0Lyyzfla
— Rathna kumar (@MrRathna) April 2, 2020
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் பொது மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா என்ற பரிசோதனையை மேற்கொள்ள வந்த சுகாதார பணியாளர்களை கல்லெடுத்து அடித்து, ஓட ஓட விரட்டும் வீடியோ நெஞ்சை பதற வைக்கிறது.
இதனை பார்த்த ரத்னகுமார், கொஞ்சம் கூட மனிதத் தன்மையே இல்லையா.. என்னவொரு காட்டுமிராண்டித் தனம்.. நமக்கெல்லாம் கொரோனா போன்ற வைரஸ் தக்க பாடம் கொடுத்தாலும் சில மனிதர்கள் திருந்தவே மாட்டார்கள் இது போன்ற வைரஸ் பாதிப்பு தேவை தானோ என சில நேரம் எண்ணத் தோன்றுகிறது என கோபமாக பதிவிட்டுள்ளார்.