Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கார் விபத்தில் சிக்கிய ரவளிபள்ளிப்பட்டு:நடிகை ரவளி பயணம் செய்த கார், லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் ரவளி அதிர்ஷ்டவசமாக காயம்எதுவுமின்றி உயிர் தப்பினார்.திருமூர்த்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரவளி. தொடர்ந்து காந்தி பிறந்த மண், அபிமன்யு.பெரிய மனுஷன், கரிசக்காட்டு பூவே உள்பட பல தமிழ்ப்படங்களில் நடித்தார். மூத்த நடிகர்களுடன் தொடர்ந்துநடித்து வந்ததால், விஜய், அஜீத் உள்ளிட்ட இளைய தலைமுறை நடிகர்கள் அண்ணி ரேஞ்சில் வைத்து ஒதுக்கிவிட்டனர்.இதனால் தமிழில் படங்கள் ஏதுமில்லாமல் தனது சொந்த மாநிலமன ஆந்திராவுக்கே ரவளி சென்று விட்டார்.ஹைதராபாத்தில் பாய் பிரண்ட் ஒருவருடன் செட்டில் ஆகிவிட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.இந் நிலையில் விஜயவாடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரவளி தனது தாயாருடன்ஹைதராபாத்தில் இருந்து காரில் புறப்பட்டார். கார் நல்கொண்டா மாவட்டம் சூர்யாபேட்டை அருகே டேக்குமட்லா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் காரின்முன் பகுதி பலத்த சேதத்திற்குள்ளானது.விபத்தில் ரவளி எந்த காயமுமின்றி உயிர் தப்பினார். ஆனால் அவரது தாயார் விஜயதுர்காவும், டிரைவர்ஸ்ரீனிவாசனும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சூர்யாபேட்டை தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டனர்.
பள்ளிப்பட்டு:
நடிகை ரவளி பயணம் செய்த கார், லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் ரவளி அதிர்ஷ்டவசமாக காயம்எதுவுமின்றி உயிர் தப்பினார்.
திருமூர்த்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரவளி. தொடர்ந்து காந்தி பிறந்த மண், அபிமன்யு.பெரிய மனுஷன், கரிசக்காட்டு பூவே உள்பட பல தமிழ்ப்படங்களில் நடித்தார். மூத்த நடிகர்களுடன் தொடர்ந்துநடித்து வந்ததால், விஜய், அஜீத் உள்ளிட்ட இளைய தலைமுறை நடிகர்கள் அண்ணி ரேஞ்சில் வைத்து ஒதுக்கிவிட்டனர்.
இதனால் தமிழில் படங்கள் ஏதுமில்லாமல் தனது சொந்த மாநிலமன ஆந்திராவுக்கே ரவளி சென்று விட்டார்.ஹைதராபாத்தில் பாய் பிரண்ட் ஒருவருடன் செட்டில் ஆகிவிட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் விஜயவாடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரவளி தனது தாயாருடன்ஹைதராபாத்தில் இருந்து காரில் புறப்பட்டார். கார் நல்கொண்டா மாவட்டம் சூர்யாபேட்டை அருகே டேக்குமட்லா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் காரின்முன் பகுதி பலத்த சேதத்திற்குள்ளானது.
விபத்தில் ரவளி எந்த காயமுமின்றி உயிர் தப்பினார். ஆனால் அவரது தாயார் விஜயதுர்காவும், டிரைவர்ஸ்ரீனிவாசனும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சூர்யாபேட்டை தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டனர்.