கார் விபத்தில் சிக்கிய ரவளிபள்ளிப்பட்டு:நடிகை ரவளி பயணம் செய்த கார், லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் ரவளி அதிர்ஷ்டவசமாக காயம்எதுவுமின்றி உயிர் தப்பினார்.திருமூர்த்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரவளி. தொடர்ந்து காந்தி பிறந்த மண், அபிமன்யு.பெரிய மனுஷன், கரிசக்காட்டு பூவே உள்பட பல தமிழ்ப்படங்களில் நடித்தார். மூத்த நடிகர்களுடன் தொடர்ந்துநடித்து வந்ததால், விஜய், அஜீத் உள்ளிட்ட இளைய தலைமுறை நடிகர்கள் அண்ணி ரேஞ்சில் வைத்து ஒதுக்கிவிட்டனர்.இதனால் தமிழில் படங்கள் ஏதுமில்லாமல் தனது சொந்த மாநிலமன ஆந்திராவுக்கே ரவளி சென்று விட்டார்.ஹைதராபாத்தில் பாய் பிரண்ட் ஒருவருடன் செட்டில் ஆகிவிட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.இந் நிலையில் விஜயவாடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரவளி தனது தாயாருடன்ஹைதராபாத்தில் இருந்து காரில் புறப்பட்டார். கார் நல்கொண்டா மாவட்டம் சூர்யாபேட்டை அருகே டேக்குமட்லா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் காரின்முன் பகுதி பலத்த சேதத்திற்குள்ளானது.விபத்தில் ரவளி எந்த காயமுமின்றி உயிர் தப்பினார். ஆனால் அவரது தாயார் விஜயதுர்காவும், டிரைவர்ஸ்ரீனிவாசனும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சூர்யாபேட்டை தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டனர்.

By Staff

பள்ளிப்பட்டு:

நடிகை ரவளி பயணம் செய்த கார், லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் ரவளி அதிர்ஷ்டவசமாக காயம்எதுவுமின்றி உயிர் தப்பினார்.

திருமூர்த்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரவளி. தொடர்ந்து காந்தி பிறந்த மண், அபிமன்யு.பெரிய மனுஷன், கரிசக்காட்டு பூவே உள்பட பல தமிழ்ப்படங்களில் நடித்தார். மூத்த நடிகர்களுடன் தொடர்ந்துநடித்து வந்ததால், விஜய், அஜீத் உள்ளிட்ட இளைய தலைமுறை நடிகர்கள் அண்ணி ரேஞ்சில் வைத்து ஒதுக்கிவிட்டனர்.

இதனால் தமிழில் படங்கள் ஏதுமில்லாமல் தனது சொந்த மாநிலமன ஆந்திராவுக்கே ரவளி சென்று விட்டார்.ஹைதராபாத்தில் பாய் பிரண்ட் ஒருவருடன் செட்டில் ஆகிவிட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் விஜயவாடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரவளி தனது தாயாருடன்ஹைதராபாத்தில் இருந்து காரில் புறப்பட்டார். கார் நல்கொண்டா மாவட்டம் சூர்யாபேட்டை அருகே டேக்குமட்லா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் காரின்முன் பகுதி பலத்த சேதத்திற்குள்ளானது.

விபத்தில் ரவளி எந்த காயமுமின்றி உயிர் தப்பினார். ஆனால் அவரது தாயார் விஜயதுர்காவும், டிரைவர்ஸ்ரீனிவாசனும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சூர்யாபேட்டை தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X