Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மும்பை கோக்கைன் போதை விருந்தில் நடிகர் வினோத் கன்னா மகன்: போலீஸ் தகவல்
கடந்த 27-ம் தேதி மும்பை-புனே நெடுஞ்சாலையில் காலாபூரில் உள்ள மவுண்ட் வியூ ரிசார்ட்டில் போதை மருந்துகள் வினியோகத்துடன் இரவு நேர ஆட்டம், பாட்டம் நடந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று 60 இளம் பெண்கள் உள்பட 300 பேரை சுற்றி வளைத்தனர். அவர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டது.
இவர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்த நபர்கள், இந்த இரவு நேர விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்கள், ரிசார்ட்டின் மேனேஜர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களுடன் போதை மருந்து தடுப்புப் பிரிவின் இன்ஸ்பெக்ட்ரான அனில் ஜாதவ் என்பவரும் சிக்கினார்.
இது குறித்து ரைகாட் எஸ்.பி. ஆர்.டி. ஷின்டே கூறியதாவது,
போதை விருந்தில் கலந்து கொண்டவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதனை முடிவுகள் வர இன்னும் சில நாட்கள் ஆகும். முடிவுகள் வந்த பிறகு தான் அவர்கள் எந்த வகையான போதைப் பொருட்கள் பயன்படுத்தினார்கள் என்று தெரியும். இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான விக்கி ஷா என்பவரை தேடி வருகிறோம்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேரும் வரும் ஜூலை மாதம் 2-ம் தேதி வரை போலீஸ் காவலில் இருப்பார்கள் என்றார்.
இதற்கிடையே காலாபூர் மவுண்ட் வியூ ரிசார்ட்டில் சிக்கிய 300 பேரில் பிரபல இந்தி நடிகர் வினோத் கன்னாவின் மகன் சாக்ஷி கன்னாவும் ஒருவர் என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த விருந்தில் ஆட்டம் போட்டவர்கள் பெரும்பாலும் மும்பை, நவி மும்பையைச் சேர்ந்தவர்கள். சிலர் இதற்காக பூனேவில் இருந்து வந்துள்ளனர்.
300 பேர் சிக்கிய விவரம் அறிந்த பெற்றோர் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு காலாபூர் வந்தனர். ஒரு பெற்றோர் கூறுகையில், எங்கள் பிள்ளைகள் அப்பாவிகள். அவர்கள் விருந்திற்காகத் தான் இங்கு வந்தனர். அவர்கள் யாரும் போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்றார்.
விருந்தில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் கூறுகையில், நான் இந்த விருந்தில் கலந்துகொள்ள ரூ. 20 ஆயிரம் தேவைப்பட்டதால் எனது செல்போனை விற்றேன். நான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை. இந்த விருந்து குறி்த்து விளம்பரதாரர்கள் சமூக வளைதளங்களில் விளம்பரம் செய்தனர் என்றார்.
வினோத் கன்னாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி அவரை விட்டுப் பிரிந்து போய் விட்டார். 2வது மனைவி கவிதா. அவருக்கு ஒரு மகன், ஒரு மகள். அந்த மகன்தான் இந்த சாக்ஷி.