Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இது என்ன டிவி ஷோவா, மீன் மார்க்கெட்டா: நடிகை, நடிகரை திட்டிய சீனியர் நடிகை
மும்பை: நாச் பால்யே 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரிமா துலி, விஷால் ஆதித்யா சிங் ஆகியோரை நடிகை ரவீணா டாண்டன் விளாசியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தயாரித்து வரும் நடன நிகழ்ச்சி நாச் பால்யே 9. இந்த நிகழ்ச்சியில் 5 முன்னாள் காதல் ஜோடிகள், 5 இந்நாள் ஜோடிகள் கலந்து கொண்டுள்ளன.
இதில் முன்னாள் காதல் ஜோடியான தொலைக்காட்சி நடிகர் விஷால் ஆதித்யா சிங் மற்றும் நடிகை மதுரிமா துலி இடையே செட்டில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி மதுரிமா விஷாலை ஓங்கி அறைந்துவிட்டார்.
மதுரிமா
ஒத்திகையின்போதும், பேக் ஸ்டேஜிலும் விஷால் ஆதித்யா சிங்கும், மதுரிமாவும் எப்பொழுது பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டே இருந்தனர். மேலும் பேட்டி கொடுக்கும்போது ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் மதுரிமா, விஷால் ஜோடி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
சண்டை
எவிக்ஷன் நாள் அன்று கூட அண்மையில் நடந்த சண்டை தொடர்பாக மதுரிமாவும், விஷாலும் விவாதித்தனர். இறுதியில் கோபம் அதிகமாகி மதுரிமா மைக்கை தூக்கிப் போட்டு உடைத்துவிட்டார். இதை பார்த்த நடுவர்களுக்கு கோபம் வந்துவிட்டது. நடுவர்களில் ஒருவரான பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் இந்த இருவரையும் விளாசினார். சும்மா, சும்மா டிராமா போடாமல் தன்மையாக நடந்து கொள்ளுமாறு தெரிவித்தார்.
நாச் பால்யே 9
நாச் பால்யே வரலாற்றிலேயே இந்த அளவுக்கு சண்டை போட்ட ஜோடி மதுரிமா, விஷால் ஜோடி தான். விஷாலுக்கு தான் எதற்கெடுத்தாலும் கோபம் வரும். அவருக்கு கோபம் அதிகமாக வரும் என்றார் மதுரிமா. ஆனால் நிகழ்ச்சியில் அதிகம் கோபப்பட்டு மோதியது மதுரிமா தான். இதற்கிடையே மதுரிமாவின் அம்மா நிகழ்ச்சிக்கு வந்து விஷாலை கண்டித்தார்.
காதல் முறிவு
சந்திரகாந்தா தொலைக்காட்சி சீரியலில் நடித்தபோது மதுரிமாவுக்கும், விஷாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் கூட நிச்சயிக்கப்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட கையோடு பிரச்சனை ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டனர். மதுரிமாவுக்கு வேறு ஒரு நடிகருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாலேயே இந்த பிரிவு என்று விஷால் தெரிவிக்க அதை அவர் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.