"விஷால் விஷால்".. அதுவரைக்கும் என்னால காத்திருக்க முடியாதே... பரபரக்கும் ரவீனா ரவி !
சென்னை : விஷால்31 படத்தில் நடிக்க, என்னால் ஊரங்கு முடியும் வரை காத்திருக்க முடியாது என்று நடிகை ரவீனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் விஷாலுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
டப்பிங் கலைஞரான இவர், ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆர்யா, விஷால்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில் நடித்துள்ளார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில், விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். கதாநாயகியாக மிருனாளினி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருந்த நிலையில் தற்போது ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

டிம்பிள் ஹயாதி
அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு அண்மையில் பூஜை போடப்பட்டது. இப்படத்திற்கு விஷால்31 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தேவி2 திரைப்படத்தி ன் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமான டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார்.

என்னால் காத்திருக்க முடியாது
பிரபல டப்பிங் கலைஞரான ரவீனா ரவி விஷால்31 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விஷால்31 படத்தில் நடிக்க, என்னால் ஊரங்கு முடியும் வரை காத்திருக்க என்று கூறியுள்ளார்.மேலும் விஷாலுடன்இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். ரவீனா ஒரு கிடாயின் கருணை மனு, காவல் துறை உங்கள் நண்பன் படத்தில் நடித்துள்ளார். விஜயின் மாஸ்டர் படத்தில் நடிகை மாளவிக மோகனுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார் ரவீனா ரவி.
Recommended Video

கமர்ஷியல் படம்
அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படவுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, என்.பி. ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார்.


Click it and Unblock the Notifications











