Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பிரபல நடிகை பெயரில் போலி ட்விட்டர் கணக்கு.. போலீஸை திட்டி அவதூறு வீடியோ.. வழக்குப் பதிவு!
மும்பை: பிரபல நடிகை பெயரில் போலி ட்விட்டர் கணக்கை உருவாக்கி, போலீசை திட்டி வீடியோ வெளியிட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தில் அவர் ஜோடியாக நடித்தவர், பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன்.
இந்தப் படத்தை அடுத்து அவர் தமிழில் கவனம் செலுத்தவில்லை. இந்தியில் மட்டுமே நடித்து வந்தார்.
முதல் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் காலமானார்.. எந்த படத்திற்காக ஆஸ்கர் விருதை சீன் கானரி வென்றார் தெரியுமா?
கே.ஜி.எஃப் சாப்டர் 2
இப்போது, யஷ் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகமான கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தில், நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகிறது. பிரசாந்த் நீல் இயக்கும் இந்தப் படத்தில் அவர் அரசியல்வாதியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
பரபரப்பு கருத்து
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரவீணா டாண்டன், அதில் பரபரப்பு கருத்துகளைத் தெரிவித்து வருவார். இந்நிலையில் அவர் பெயரில் ஒருவர் போலியாக ட்விட்டர் கணக்கை உருவாக்கி உள்ளார். அதில் மும்பை போலீசை இழிவுபடுத்தி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மராத்தி மொழி
மும்பை காவல்துறைத் தலைவர் பரம்பீர் சிங்கின் புகைப்படங்களை மார்பிங் செய்தும் அவதூறு கருத்துக்களையும் வீடியோவாக பதிவிட்டுள்ளார். கூடவே மராத்தி மொழியையும் மராத்தி பேசுபவர்களையும் அவதூறாகக் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி அறிந்த நடிகை ரவீண்டா டாண்டன் அதிர்ச்சி அடைந்தார்.
நற்பெயருக்கு களங்கம்
இதையடுத்து அந்த அடையாளம் தெரியாத நபர் மீது, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார் ரவீணா. போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர். மாநில அரசு மற்றும் போலீசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதை சிலர் செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
கணக்கு முடக்கம்
இந்தப் புகாரை அடுத்து, அந்த போலி ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பிரபலங்களின் பெயரில், இதுபோன்ற போலி கணக்குகளை உருவாக்கி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர்.