Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மோடி பிரதமரான பிறகுதான் இப்படிப் பேசுகிறார்! - ஆமிர்கானுக்கு எதிராக ரவீணா டாண்டன்
சகிப்புத் தன்மையும் பாதுகாப்பும் இல்லாத இந்திய நாட்டை விட்டே வெளியேறலாம் என் மனைவி யோசனை கூறியதாக ஆமிர்கான் கூறியது இந்திய ஊடகங்களில் பெரும் செய்தியாகிவிட்டது.
ஏகப்பட்ட விவாதங்கள், பிரதி விவாதங்கள் மீடியாக்களில். திரையுலகப் பிரபலங்கள் தொடர்ந்து ஆமிருக்கு எதிராகவும் ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.
ஆமிர்கான் கருத்துக்கு சல்மான்கான், ஷாரூக் கான் போன்றவர்கள் ஆதரவளித்துள்ளனர். ஆனால் அனுபம் கெர் போன்றவர்கள், 'அதெப்படி ஏழு மாதங்களுக்குள் சகிப்புத் தன்மையும் பாதுகாப்பும் இல்லாமல் போய்விட்டது இந்தியாவில்?' என ஆமிருக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் ஆமீர் கானுடன் ஒரு காலத்தில் ஜோடியாக நடித்த ரவீணா டான்டன் தன் பங்குக்கு ஆமிர்கானைச் சாடியுள்ளார். அதில் "நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு கடந்த ஆறேழு மாதங்களாகத்தான் இப்படிப்பட்ட சகிப்புத் தன்மை பற்றிய கருத்துக்களைக் கூறி வருகின்றனர்," என்று தெரிவித்துள்ளார்.