Just In
- just now
என்ன செய்வது என தெரியாமல் நடு ரோட்டில் நின்றேன்.. மாஸ்டர் மகேந்திரனின் அனுபவம்!
- 19 min ago
அப்படி கட்டிப்பிடித்தாரே.. எவ்வளவு பொய்யானவர் என்று இப்போது தெரிகிறதா? ரியோவை தோலுரிக்கும் பிரபலம்!
- 34 min ago
எது சிலைன்னு தெரியலையே.. மகாபலிபுரத்துக்குத் திடீர் விசிட் அடித்த நடிகை.. அப்படி வியப்பு!
- 45 min ago
விட மாட்டேங்குறானே.. நீ எப்படிடா இப்படி வளர்ந்த? ஆரியை பார்த்து பிரமிக்கும் பிரபல இசையமைப்பாளர்!
Don't Miss!
- Finance
தங்கம் விலை 49,000 ரூபாய்க்கு கீழ் சரிவு.. தொடரும் வீழ்ச்சி.. இன்னும் குறைய வாய்ப்பு இருக்கு..!
- News
"நீங்களும் எடுக்கோணும்.. நானும் எடுக்கோணும்.." இயல்பா பேசிய எடப்பாடியார்.. அப்படியே அசந்துபோன மதுரை!
- Sports
என்ன இது? இதற்கு மன்னிப்பே இல்லை.. சீனியர் வீரர் மாதிரியா நடந்துக்குறீங்க.. வசமாக சிக்கிய ரோஹித்!
- Lifestyle
கொத்து கொத்தா முடி கொட்டுதா? அதை தடுக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- Automobiles
2021 பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கில் இப்படியொரு அப்கிரேடா?! வீடியோ மூலம் தெரியவந்த உண்மை
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடிகை பார்லரில் துப்பாக்கிச்சூடு... இதுக்காகத்தானாமே? பிரபல தாதா எல்லாத்தையும் சொல்லிட்டாராம்!
பெங்களூரு: நடிகையின் பியூட்டி பார்லரில் துப்பாக்கிச் சூடு நடத்தியது தனது ஆட்கள்தான் என்று பிரபல தாதா ரவிபூஜாரி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
தமிழில் கார்த்தி நடித்த பிரியாணி, இந்தியில் ஜான் ஆபிரஹாம் நடித்த மெட்ராஸ் கபே படங்களில் நடித்தவர், நடிகை லீனா மரியா பால்.
கேரளாவைச் சேர்ந்த இவர், மலையாளத்தில் ரெட் சில்லீஸ், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு
இவர் கொச்சியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு பைக்கில் வந்த 2 பேர் துப்பாக்கியால் இங்கு சரமாரியாகச் சுட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பானது. சம்பவம் நடந்தபோது பார்லருக்குள் வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை. பிரபல தாதா ரவிபூஜாரியின் ஆட்கள்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

புழல் சிறையில்
நடிகை லீனா மரியா பால், தனது காதலர் சுகாஷ் சந்திரசேகருடன் சேர்ந்து, சென்னை அம்பத்தூர் கனரா வங்கியில், போலி ஆவணம் மூலம் 19 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தோணி பெர்னாண்டஸ்
இந்நிலையில், செனகல் நாட்டில் அந்தோணி பெர்னாண்டஸ் என்ற பெயரில் மறைந்திருந்த தாதா ரவிபூஜாரியை, போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். பெங்களூரில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை மிரட்டல், பணம் பறித்தது உட்பட பல்வேறு குற்ற நடவடிக்கைகள் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணம் பறிப்பதற்காக
பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான், சல்மான் கான், அக்ஷய்குமார், கரண் ஜோஹர் உட்பட பல பிரபலங்களை அவர் மிரட்டியுள்ளார். இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் நடிகை லீனா மரியா பால் பார்லரில் துப்பாக்கிச்சூடு நடத்தியது, தனது ஆட்கள்தான் என்றும் பணம் பறிப்பதற்காக இந்த செயலில் ஈடுபட்டதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கேரளாவுக்கு அவரை கொண்டு சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.