Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திட்டமிட்டபடி திருமணம் - சுஜிபாலாவை மணக்க ரவிக்குமார் சம்மதம்!
நடிகை சுஜிபாலாவுக்கும், இயக்குனர் ரவிக்குமாருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. திருச்செந்தூர் கோவிலில் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் திருமணத்துக்கு முந்தைய நாள் சுஜிபாலா திடீரென அதிகமான தூக்க மாத்திரைகள் தின்று மயங்கி விழுந்தார்.
அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. திருமணம் பிடிக்காமல்தான் சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது.
இன்னும் சிலர் சுஜிபாலாவை மணக்க இயக்குனர் ரவிக்குமார் மறுத்து விட்டதால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றார் என்று கூறினார்.
அதற்கு வலு சேர்ப்பது போல மருத்துவமனையில் இருந்த சுஜிபாலாவை ரவிக்குமார் நேரில் போய் உடல் நலம் கூட விசாரிக்கவில்லை.
இருமாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்த போதும் பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் சுஜிபாலா சிகிச்சை முடிந்து நிருபர்களைச் சந்தித்தார்.
தான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்றும், தெரியாமல் மாத்திரைகளை சாப்பிட்டதால் மயங்கி விழுந்து விட்டதாகவும் கூறினார்.
"டைரக்டர் ரவிக்குமாருக்கும் எனக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. எங்கள் திருமணம் அக்டோபரில் நடக்கும். திருமணத்துக்குப்பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன்", என்றும் சுஜிபாலா கூறினார்.
இதற்கிடையே,சுஜிபாலாவை திருமணம் செய்து கொள்ள இயக்குனர் ரவிக்குமார் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். தனக்காக தூக்க மாத்திரை சாப்பிடும் அளவுக்குப் போன சுஜிபாலாவை திருமணம் செய்து கொள்ள முழு சம்மதம் என்று அவர் கூறியுள்ளாராம்.