Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மகாலட்சுமிக்கு முன் யானை போல் நான் இருக்கிறேன்..அவளை அழவிடமாட்டேன்..ரவீந்திரன் பேச்சு!
சென்னை: மகாலட்சுமிக்கு முன்னாள் யானை போல் நான் இருக்கிறேன், என்னைத்தாண்டித்தான் அவளை அழவைக்க முடியும் என வீடியோ பதிவில் தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசியுள்ளார்.
தொகுப்பாளினியும், நடிகையுமான விஜே மகாலட்சுமி ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில், தயாரிப்பாளர் ரவீந்திரனை திடீர் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது, திருமணம் செப்டம்பர் 1ந் தேதி திருப்பதியில் மிகவும் எளிமையாக இருவரின் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது.
ட்ரெய்லர் மட்டுமா இல்ல படமும் தள்ளிப் போகுதா? அப்டேட்டுக்காக காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்
திருமணம்
ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமி திருமணம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதுமட்டும் இல்லாமல் இருவரும் ஜோடியாக யூடியூப் சேனல் மற்றும் ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்தனர். அதோடு பிரபலம் ஒருவரும் இவர்களது இன்டர்வியூ குறித்து கடுமையாக விமர்சனமும் செய்திருந்தார்.
இதனால் தான் பேட்டி கொடுத்தோம்
இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்கள் திருமணத்தை இவ்வளவு பெரிய விஷயமா பேசுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் திருமணம் பணத்திற்காக நடந்தது, கட்டாயத் திருமணம் என பல தவறான செய்தி பரவியதால் நாங்கள், அதை தெளிவுப்படுத்த பேட்டி கொடுத்தோமே தவிர விளம்பரத்திற்காக இல்லை.
எங்களுக்கும் உணர்வு இருக்கு
என்னை என் உருவத்தை வைத்து பலர் கேலி செய்து பேசுகிறார்கள். என்னை உருவகேலி செய்வது இன்று, நேற்று நடக்கவில்லை பல வருடங்களாக என்னை கேலி செய்து வருகிறார்கள் அதை பற்றி எனக்கு கவலை. ஆனால், என் மனைவி பற்றி மோசமான கமெண்டுகள் வருகின்றன. நீங்கள் போடும் கமெண்டுகளை அம்மா, அக்கா போன்றோரை படிக்க சொல்லுங்கள். அவர்களுக்கு எவ்வாறு உணர்வு இருக்குமோ அதே உணர்வு தான் எங்களுக்கும் இருக்கிறது.
யானை போல் அவளை காப்பேன்
இன்டர்வியூ தொல்லை இனி இருக்காது, தயவு செய்து எந்த ஊடகமும் எங்களை நேர்காணலுக்கு அழைக்காதீர்கள் நாங்கள் எங்கள் வாழ்க்கையை வாழப்போகிறோம். நிச்சயமாக மகாலட்சுமி சந்தோஷமா இருப்பா. தனது மனைவியான மகாலட்சுமியை யாரும் அழவைக்க இயலாது. மகாலட்சுமிக்கு முன்னால் யானை போல் நான் இருக்கிறேன் அவளை என்னை தாண்டி தான் அழ வைக்க முடியும். மிக விரைவில் நான் மகாலட்சுமிக்காக உடல் எடையை குறைத்துக் கொள்வேன். எங்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கிறது நாங்கள் நீண்ட காலம் சேர்ந்து வாழ்வோம் எங்களைப் பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை என பேசினார் ரவீந்திரன்.
கேலி செய்யாதீர்கள்
இதையடுத்து, பேசிய மகாலட்சுமி, தனது கணவரின் உருவம் குறித்து யாரும் கேலி செய்ய வேண்டாம். உங்களுடைய வீட்டில் யாரையாவது இப்படி கேலி செய்தால் நீங்கள் எப்படி கஷ்டப்படுவீர்கள். அப்படித்தான் நீங்கள் இவரை கேலி செய்யும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இந்த செய்த கமெண்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாழ்ந்து காட்டுவோம் என சூளுரைத்தார். இவர்கள் இருவரும் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.